Sunday, July 20, 2014

பெருந்துறை
சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.
237 பேருக்கு விலையில்லா ஆடுகள்
சீனாபுரம் மற்றும் திங்களூர் பகுதிகளில் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ், பெருந்துறை அ.தி.மு.க. செயலாளர் திங்களூர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல இயக்குனர் ஜெயராமன் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து பேசினார்.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதன்படி சீனாபுரம் மற்றும் திங்களூர் ஊராட்சிகளை சேர்ந்த 237 பேருக்கு, ரூ.31 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 948 விலையில்லா ஆடுகளை முதல்–அமைச்சர் வழங்க உத்தரவிட்டார்.
ஈரோடு–திங்களூர் பஸ் மீண்டும் இயக்கம்
மேலும் திங்களூர் பகுதியில் ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கால்நடை ஆஸ்பத்திரி, ரூ.7 லட்சம் செலவில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம், 3 படுக்கை வசதிகளுடன் இருந்த திங்களூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 35 படுக்கை வசதியுடன் தரம் உயர்வு, ரூ.1 கோடி செலவில் அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடங்கள், திங்களூரில் இருந்து திருப்பூர் மற்றும் பழனிக்கு பஸ் வசதி, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்–அமைச்சர் செயல்படுத்தி உள்ளார்.
ஈரோடு–திங்களூர் டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படும். திங்களூர் நால்ரோடு பஸ் நிறுத்தத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நவீன நிழற்குடை ஒன்று விரைவில் அமைத்து தரப்படும். தற்போது வழங்கப்பட்டு உள்ள விலையில்லா ஆடுகளை பயனாளிகள் நன்கு பராமரித்து வளர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
மகளிருக்காக உருவாக்கப்பட்ட திட்டம்
கலெக்டர் சண்முகம் கூறுகையில், ‘‘விலையில்லா ஆடுகள் வழங்கும் தமிழக அரசின் இந்த உன்னத நோக்கம் மகளிருக்காக உருவாக்கப்பட்டது. மகளிரின் பொருளாதாரம் மேம்பட இந்த திட்டம் பெரிதும் உதவும். ஒட்டுமொத்த குடும்பத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே இந்த விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு உள்ளது. தனி நபர் நலம், ஒரு குடும்பத்தின் நலம், ஒரு சமூகத்தின் நலம் ஆகியவை நன்கு திகழ ஒரு குடும்ப அமைப்பு வலிமையாக இருக்க வேண்டும். அதற்கு இந்த திட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்ரமணியம் (சீனாபுரம்), கீதா வேலாயுதசாமி (திங்களூர்), சோமசுந்தரம் (போலநாய்க்கன்பாளையம்), மோகன்ராஜ் (பாப்பம்பாளையம்), ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனி, ராஜன், ஊராட்சி செயலாளர் செங்கோடு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் பிரகாசம் வரவேற்று பேசினார். முடிவில், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தங்கவேல் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment