Sunday, July 20, 2014

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் கடந்த ஜூன் 11–ம் தேதி தாளவாடி முகமது இலியாஸ் (25) என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார். மேலும், கடந்த 16–ந் தேதி இரவு திம்பம் வனச்சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த வனக்காவலர் கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.
இந்த 2 பேரையும் திம்பத்தில் உலாவும் சிறுத்தை தான் கடித்துக் கொன்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சிறுத்தை திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனால் திம்பம், காளி திம்பம் மற்றும் ஆசனூர் மலை பகுதியில் உள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்,
சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் பொருத்தப்பட்ட தானியங்கி காமிராவில் சிறுத்தை நடமாடுவது பதிவாகியுள்ளது. இதையடுத்து சிறுத்தை அதே பகுதியில் உலாவுவது உறுதிபடுத்தப்பட்டதை அதனை பிடிக்க நீர்நீலை மற்றும் வழித்தடத்தில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.
சிறுத்தை நடமாடிய பாதையில் நேற்று மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. இரு கூண்டுகளில் ஆடுகளும் ஒரு கூண்டில் நாயும் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, துப்பாக்கி மூலம் மயக்கஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் மற்றொறு பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர்.
சத்தி, ஆசனூர் புலிகள் காப்பக கள துணை இயக்குநர்கள் சி.ஹெச்.பத்மா, கே.ராஜ்குமார், வனசரக அலுலவர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் என மொத்தமாக 100–க்கும் மேற்பட்டோர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் முடக்கி விடப்பட்டுள்ளனர். இதற்கென அவர்கள் நவீன தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–
சிறுத்தையால் வனக்காவலர் கொல்லப்பட்ட பிறகு சிறுத்தையின் கால் தடங்கள் உள்ள பகுதியில் 3–வது கூண்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது சாரல் மழை பெய்து கொண்டிருப்பதாலும் திம்பம் பகுதியில் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளதாலும் சிறுத்தை மீண்டும் சாலையோரம் தென்பட வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் சிறுத்தை உயிருடன் பிடிபட வாய்ப்புள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
'மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவேன்' - திருநாவுக்கரசர் திருச்சி: தொகுதி மக்களுக்காக சாலையில் இறங்கி ஆர்ப்பாட...
-
கிராமங்களில் அழிந்து வரும் கலைகளை பாது காக்கவும், புத்துணர்வு அளிப்பதற்காகவும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே தேசிய அளவில் கலை விழா போட்டிகள் நட...
-
திருச்சியில் பிஜேபியின் சார்பாக தேர்தல் ஆலேசானை கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் தலைவர் முரலிதர ராவ் மற்றும...
0 comments:
Post a Comment