Sunday, July 20, 2014

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் கடந்த ஜூன் 11–ம் தேதி தாளவாடி முகமது இலியாஸ் (25) என்பவர் சிறுத்தையால் கொல்லப்பட்டார். மேலும், கடந்த 16–ந் தேதி இரவு திம்பம் வனச்சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த வனக்காவலர் கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றது.
இந்த 2 பேரையும் திம்பத்தில் உலாவும் சிறுத்தை தான் கடித்துக் கொன்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சிறுத்தை திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனால் திம்பம், காளி திம்பம் மற்றும் ஆசனூர் மலை பகுதியில் உள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்,
சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திம்பம் மலைப்பாதையில் பொருத்தப்பட்ட தானியங்கி காமிராவில் சிறுத்தை நடமாடுவது பதிவாகியுள்ளது. இதையடுத்து சிறுத்தை அதே பகுதியில் உலாவுவது உறுதிபடுத்தப்பட்டதை அதனை பிடிக்க நீர்நீலை மற்றும் வழித்தடத்தில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.
சிறுத்தை நடமாடிய பாதையில் நேற்று மேலும் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. இரு கூண்டுகளில் ஆடுகளும் ஒரு கூண்டில் நாயும் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, துப்பாக்கி மூலம் மயக்கஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் மற்றொறு பிரிவினரும் ஈடுபட்டுள்ளனர்.
சத்தி, ஆசனூர் புலிகள் காப்பக கள துணை இயக்குநர்கள் சி.ஹெச்.பத்மா, கே.ராஜ்குமார், வனசரக அலுலவர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் என மொத்தமாக 100–க்கும் மேற்பட்டோர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் முடக்கி விடப்பட்டுள்ளனர். இதற்கென அவர்கள் நவீன தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–
சிறுத்தையால் வனக்காவலர் கொல்லப்பட்ட பிறகு சிறுத்தையின் கால் தடங்கள் உள்ள பகுதியில் 3–வது கூண்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது சாரல் மழை பெய்து கொண்டிருப்பதாலும் திம்பம் பகுதியில் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளதாலும் சிறுத்தை மீண்டும் சாலையோரம் தென்பட வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் சிறுத்தை உயிருடன் பிடிபட வாய்ப்புள்ளது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
0 comments:
Post a Comment