Saturday, July 19, 2014

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
துறை ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழுவே புறநிலை ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்டவைகளை பரிசீலித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணாவுக்கு தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் புறநிலை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க தபால்காரர் மற்றும் 4–ம் பிரிவு மாநிலத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சுப்பையா, புறநிலை ஊழியர் சங்க உதவி கோட்டத் தலைவர் மணி, அஞ்சல் 4ஆம் பிரிவு தென்காசி கிளைச் செயலாளர் சிவசங்கரன், கோவில்பட்டி கோட்ட அஞ்சல் 3ஆம் பிரிவுச் செயலர் பொன்னுச்சாமி ஆகியோர் பேசினர். தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் புறநிலை ஊழியர் சங்க கோட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment