Saturday, July 19, 2014

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
துறை ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழுவே புறநிலை ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்டவைகளை பரிசீலித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணாவுக்கு தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் புறநிலை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க தபால்காரர் மற்றும் 4–ம் பிரிவு மாநிலத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சுப்பையா, புறநிலை ஊழியர் சங்க உதவி கோட்டத் தலைவர் மணி, அஞ்சல் 4ஆம் பிரிவு தென்காசி கிளைச் செயலாளர் சிவசங்கரன், கோவில்பட்டி கோட்ட அஞ்சல் 3ஆம் பிரிவுச் செயலர் பொன்னுச்சாமி ஆகியோர் பேசினர். தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் புறநிலை ஊழியர் சங்க கோட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment