Saturday, July 19, 2014
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
துறை ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழுவே புறநிலை ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்டவைகளை பரிசீலித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற தர்ணாவுக்கு தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் புறநிலை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராமராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க தபால்காரர் மற்றும் 4–ம் பிரிவு மாநிலத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சுப்பையா, புறநிலை ஊழியர் சங்க உதவி கோட்டத் தலைவர் மணி, அஞ்சல் 4ஆம் பிரிவு தென்காசி கிளைச் செயலாளர் சிவசங்கரன், கோவில்பட்டி கோட்ட அஞ்சல் 3ஆம் பிரிவுச் செயலர் பொன்னுச்சாமி ஆகியோர் பேசினர். தேசிய தபால் ஊழியர் சம்மேளனத்தின் புறநிலை ஊழியர் சங்க கோட்டச் செயலர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment