Saturday, July 19, 2014
வாசுதேவநல்லூர் பேரூராட்சியின் சார்பில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே டவுண் பஞ்சாயத்து சார்பில் 2009–ல் அமைக்கப்பட்டது. பூங்கா சுமார் ரூ.30 லட்சம் செலவில் நடைமேடை, ஊஞ்சல், செயற்கை நீர்ஊற்று, பூங்கா, நீர் அருவி ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
இதனை பராமரிப்பதற்காக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த பூங்காவில் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல வகைகளில் பயன்படுத்தி வந்தனர். தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாவினர் இங்கு வந்து புகைப்படம் எடுத்தும் அனுபவித்து வந்தனர்.
மேலும் நடைமேடை அமைக்கப்பட்டு இருந்ததால் அனைவரும் நடைபயிற்சி செய்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு இங்கு பணியாற்றிய காவலர் திடீரென்று இறந்து விட்டார். அன்றிலிருந்து பூங்காவினை பராமரிக்கப்படாததால் இங்கு அமைக்கப்பட்டிருந்த பூஞ்செடிகள், புல்வெளிகள் மற்றும் அழகு செடிகள் அனைத்தும் தண்ணீர் ஊற்றப்படாததால் கருகி போய்விட்டது.
செயற்கை நீர்ஊற்று உள்பட அனைத்தும் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவினர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். இதனை சரி செய்து பராமரிப்பு பணிகளை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகராஜன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் டவுண் பஞ்சாயத்து தலைவரும், மகாத்மாகாந்தி சேவா சங்கத்தின் தலைவர் தவமணி கூறியதாவது
பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வந்த பேரூராட்சி பூங்காவினை சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் அவை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாக சீர்கேடுகளினால் இதனை செயல்படுத்த முடியாமல் பராமரிப்பு பணிகளை செய்து தருவதற்கு தனியார் நிறுவனங்கள் சேவை நோக்கத்தோடு செய்து தர முன் வருகிறது. அவர்களிடம் ஒப்படைத்தால் சிறப்பாக செய்து தருவதற்கு தயாராக இருக்கின்றனர். அதற்கான அனுமதியினை வழங்கினால் புதிய தோற்றத்துடன் அனைவரும் பயன்படுத்தும் வண்ணமாக பூங்கா மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பீரங்கி சுப்பிரமணியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி பல்லடம் உடுமலை தாராபுரம் மற்றும் காங்கயம் உட்கோட்டங்களில் விநாயகர் 2014.சதுர்த்தி விழாவினை முன்னிட்ட...
-
குடத்தில் குடிநீர் கொண்டுவர அபாயகரமான கிணற்றில் இறங்கும் பள்ளிச்சிறுமி. பள்ளி செல்ல வேண்டிய குழந்தைகள் குடிநீருக்காக கிணற்றில் இறக்கி...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
0 comments:
Post a Comment