Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Anonymous in ,    
வாசுதேவநல்லூரில் பராமரிப்பின்றி மூடி கிடக்கும் பேரூராட்சி பூங்கா

வாசுதேவநல்லூர் பேரூராட்சியின் சார்பில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே டவுண் பஞ்சாயத்து சார்பில் 2009–ல் அமைக்கப்பட்டது. பூங்கா சுமார் ரூ.30 லட்சம் செலவில் நடைமேடை, ஊஞ்சல், செயற்கை நீர்ஊற்று, பூங்கா, நீர் அருவி ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டது.
இதனை பராமரிப்பதற்காக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த பூங்காவில் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல வகைகளில் பயன்படுத்தி வந்தனர். தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாவினர் இங்கு வந்து புகைப்படம் எடுத்தும் அனுபவித்து வந்தனர்.
மேலும் நடைமேடை அமைக்கப்பட்டு இருந்ததால் அனைவரும் நடைபயிற்சி செய்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு இங்கு பணியாற்றிய காவலர் திடீரென்று இறந்து விட்டார். அன்றிலிருந்து பூங்காவினை பராமரிக்கப்படாததால் இங்கு அமைக்கப்பட்டிருந்த பூஞ்செடிகள், புல்வெளிகள் மற்றும் அழகு செடிகள் அனைத்தும் தண்ணீர் ஊற்றப்படாததால் கருகி போய்விட்டது.
செயற்கை நீர்ஊற்று உள்பட அனைத்தும் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவினர் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். இதனை சரி செய்து பராமரிப்பு பணிகளை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகராஜன் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் டவுண் பஞ்சாயத்து தலைவரும், மகாத்மாகாந்தி சேவா சங்கத்தின் தலைவர் தவமணி கூறியதாவது


பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வந்த பேரூராட்சி பூங்காவினை சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் அவை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாக சீர்கேடுகளினால் இதனை செயல்படுத்த முடியாமல் பராமரிப்பு பணிகளை செய்து தருவதற்கு தனியார் நிறுவனங்கள் சேவை நோக்கத்தோடு செய்து தர முன் வருகிறது. அவர்களிடம் ஒப்படைத்தால் சிறப்பாக செய்து தருவதற்கு தயாராக இருக்கின்றனர். அதற்கான அனுமதியினை வழங்கினால் புதிய தோற்றத்துடன் அனைவரும் பயன்படுத்தும் வண்ணமாக பூங்கா மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: