Sunday, August 10, 2014
வடபழனி ஆற்காடு சாலையில் பிக்பஜார் உள்ளது. இதற்கு வெளியே 1½ வயது ஆண் குழந்தை ஒன்று நேற்று மாலை அனாதையாக நின்று கொண்டிருந்தது. நீலகலரில் ஜீன்சும், சிவப்பு கலரில் கட்டம் போட்ட சட்டையும் அணிந்து இருந்தான்.
வடபழனி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சி அந்த பகுதி வழியாக சென்றபோது குழந்தை அனாதையாக நின்றதை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் அங்கு விசாரித்தபோது அங்கிருந்தவர்கள் குழந்தை யார் என்று தெரியாது என்று கூறினார்.
உடனே அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு மாலை 4.30 மணி அளவில் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.
அந்த குழந்தை பற்றிய தகவல்கள் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. இரவு 10.30 மணி வரை குழந்தையை தேடி யாரும் வரவில்லை.
இதைத்தொடர்ந்து செனாய் நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இரவில் அந்த குழந்தைக்கு பால், பிஸ்கட் கொடுக்கப்பட்டது.
அந்த குழந்தையை அதன் உரியவரிடம் ஒப்படைக்க சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சி வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தனக்கு தெரிந்த 300 நபர்களுக்கு தகவல் அனுப்பினார். ஆனால் இதுவரை அந்த குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை.
இந்த குழந்தை பற்றி தகவல் அறிந்தவர்கள் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்குமாறு (044–23452635) அறிவிக்கப்பட்டுள்ளது.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...