Tuesday, August 26, 2014
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கக் கோரி நடைபெறவுள்ள வேலைநிறுத்த போராட்டம் தொடர்பான ஆயத்த விளக்க வாயிற்கூட்டம் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள போக்குவரத்து மண்டல தலைமையகம் முன்பு நடந்தது. தொமுச தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரவை தலைவர் நடராஜன், மாவட்ட திமுக செயலாளர் ராஜா, மாநகர செயலாளர் குமார்முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த கூட்டத்தில், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், 11வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரத்துகளை அமல்படுத்த வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி பென்சன் வழங்க வேண்டும், பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கவும், ஓய்வு பெறும்போதே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவை அறிவித்துள்ளபடி வரும் 1ம்தேதி வேலைநிறுத்த போராட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், தொமுச பொதுச்செயலாளர் குழந்தைசாமி, பேரவை துணை தலைவர் ரத்தினவேலு, மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், பொருளாளர் தங்கமுத்து, தமிழ்ச்செல்வன், மாது உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொமுச பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும், 11வது ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷரத்துகளை அமல்படுத்த வேண்டும், 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்டபடி பென்சன் வழங்க வேண்டும், பஞ்சப்படி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்கவும், ஓய்வு பெறும்போதே அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவை அறிவித்துள்ளபடி வரும் 1ம்தேதி வேலைநிறுத்த போராட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில், தொமுச பொதுச்செயலாளர் குழந்தைசாமி, பேரவை துணை தலைவர் ரத்தினவேலு, மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம், பொருளாளர் தங்கமுத்து, தமிழ்ச்செல்வன், மாது உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொமுச பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
0 comments:
Post a Comment