Tuesday, August 26, 2014
அந்தியூர், ; ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு ரூ.44 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் காவல் நிலையம் கவுந்தபாடி செல்லும் மெயின்ரோட்டில் 1998ம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. போதிய இடவசதியில்லாமல் நெருக்கடியில் இயங்கி வருவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
தமிழக காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு காவல் வீட்டுவசதி கழகம் மூலம் ஆப்பக்கூடல் காவல் நிலையம் கட்டிடம் கட்ட ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆப்பக்கூடல் காவல் நிலையத்திற்கு பவானி மெயின் ரோட்டில், கால்நடை மருத்துவமனை அருகில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. புதியதாக கட்டப்படும் காவல் நிலையம் இரண்டு அடுக்குமாடிகளை கொண்டது.
பூமி பூஜையில், பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் பாலக்கால் போட்டு பணியைத் துவக்கிவைத்தார். எஸ்.ஐ.க்கள் மணி, ராமதிலகம், பூபதி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
0 comments:
Post a Comment