Monday, August 25, 2014
ஈரோடு குமலன் குட்டை பகுதியில் ஒரு தனியார் கார் ஷோ ரூம் உள்ளது. இங்கு கேசியராக சிவகுமார் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் காலையில் பெருந்துறை ரோட்டில் யு.ஆர்.பி. நகரில் உள்ள ஸ்டேட் பாங்கில் கம்பெனி பணத்தை கட்ட செல்வது வழக்கம். இதேபோல் இன்று காலை 10 மணியளவில் சிவகுமார், கம்பெனி பணம் ரூ.6 லட்சத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தனது மொபட்டில் வங்கிக்கு சென்றார். பண பையை மொபட்டுக்கு முன்னால் வைத்திருந்தார்.
பெருந்துறை ரோட்டில் வங்கிக்கு செல்ல வேண்டும் சென்டர் மீடியனை சுற்றி தான் செல்ல வேண்டும். இதனால் மொபட்டை மெதுவாக வலதுபக்கம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த சமயத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள், வேகமாக வந்தனர். திடீரென அவர்கள் 2 பேரும் , மொபட்டில் நின்றிருந்த சிவகுமார் அருகே வந்ததும் அவரது கண்ணில் மிளகாய் பொடி தூவினர். இதனால் நிலைகுலைந்து கண் எரிச்சல் தாங்காமல் அவர் கூச்சல் போட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 2 வாலிபர்களும் மொபட்டில் முன் இருந்த ரூ.6 லட்சம் பணபையை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
பட்டப்பகலில் அதுவும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரோட்டில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு நின்ற பொதுமக்களும் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கார்த்திக் மற்றும் வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கண்ணில் மிளகாய் தூவப்பட்டதால் சிவகுமார், தனியார் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிவகுமார் மீது மிளகாய் பொடி தூவி பணத்தை கொள்ளையடித்த வாலிபர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இன்று பட்டப்பகலில் நடுரோட்டில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.6 லட்சம் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
0 comments:
Post a Comment