Monday, August 25, 2014
ஈரோடு குமலன் குட்டை பகுதியில் ஒரு தனியார் கார் ஷோ ரூம் உள்ளது. இங்கு கேசியராக சிவகுமார் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் காலையில் பெருந்துறை ரோட்டில் யு.ஆர்.பி. நகரில் உள்ள ஸ்டேட் பாங்கில் கம்பெனி பணத்தை கட்ட செல்வது வழக்கம். இதேபோல் இன்று காலை 10 மணியளவில் சிவகுமார், கம்பெனி பணம் ரூ.6 லட்சத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தனது மொபட்டில் வங்கிக்கு சென்றார். பண பையை மொபட்டுக்கு முன்னால் வைத்திருந்தார்.
பெருந்துறை ரோட்டில் வங்கிக்கு செல்ல வேண்டும் சென்டர் மீடியனை சுற்றி தான் செல்ல வேண்டும். இதனால் மொபட்டை மெதுவாக வலதுபக்கம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த சமயத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள், வேகமாக வந்தனர். திடீரென அவர்கள் 2 பேரும் , மொபட்டில் நின்றிருந்த சிவகுமார் அருகே வந்ததும் அவரது கண்ணில் மிளகாய் பொடி தூவினர். இதனால் நிலைகுலைந்து கண் எரிச்சல் தாங்காமல் அவர் கூச்சல் போட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 2 வாலிபர்களும் மொபட்டில் முன் இருந்த ரூ.6 லட்சம் பணபையை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
பட்டப்பகலில் அதுவும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரோட்டில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு நின்ற பொதுமக்களும் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கார்த்திக் மற்றும் வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கண்ணில் மிளகாய் தூவப்பட்டதால் சிவகுமார், தனியார் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிவகுமார் மீது மிளகாய் பொடி தூவி பணத்தை கொள்ளையடித்த வாலிபர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இன்று பட்டப்பகலில் நடுரோட்டில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.6 லட்சம் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
0 comments:
Post a Comment