Monday, August 25, 2014
ஈரோடு குமலன் குட்டை பகுதியில் ஒரு தனியார் கார் ஷோ ரூம் உள்ளது. இங்கு கேசியராக சிவகுமார் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் தினமும் காலையில் பெருந்துறை ரோட்டில் யு.ஆர்.பி. நகரில் உள்ள ஸ்டேட் பாங்கில் கம்பெனி பணத்தை கட்ட செல்வது வழக்கம். இதேபோல் இன்று காலை 10 மணியளவில் சிவகுமார், கம்பெனி பணம் ரூ.6 லட்சத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தனது மொபட்டில் வங்கிக்கு சென்றார். பண பையை மொபட்டுக்கு முன்னால் வைத்திருந்தார்.
பெருந்துறை ரோட்டில் வங்கிக்கு செல்ல வேண்டும் சென்டர் மீடியனை சுற்றி தான் செல்ல வேண்டும். இதனால் மொபட்டை மெதுவாக வலதுபக்கம் திரும்புவதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த சமயத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள், வேகமாக வந்தனர். திடீரென அவர்கள் 2 பேரும் , மொபட்டில் நின்றிருந்த சிவகுமார் அருகே வந்ததும் அவரது கண்ணில் மிளகாய் பொடி தூவினர். இதனால் நிலைகுலைந்து கண் எரிச்சல் தாங்காமல் அவர் கூச்சல் போட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 2 வாலிபர்களும் மொபட்டில் முன் இருந்த ரூ.6 லட்சம் பணபையை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
பட்டப்பகலில் அதுவும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரோட்டில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு நின்ற பொதுமக்களும் செய்வதறியாது திகைத்து போய் நின்றனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) கார்த்திக் மற்றும் வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கண்ணில் மிளகாய் தூவப்பட்டதால் சிவகுமார், தனியார் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிவகுமார் மீது மிளகாய் பொடி தூவி பணத்தை கொள்ளையடித்த வாலிபர்கள் யார்? என்பது பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் இன்று பட்டப்பகலில் நடுரோட்டில் தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.6 லட்சம் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
 
0 comments:
Post a Comment