Monday, August 25, 2014
ஈரோட்டை அடுத்த கூரைபாளையத்தில் நந்தா சென்ட்ரல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விளையாட்டு விழா நந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடந்தது. பள்ளியின் முதன்மை முதல்வர் லிடியா ஜோஸ்வா வரவேற்றார்.
விழாவில் ஒலிம்பிக் தீபத்தை அர்ஜுனா விருதுபெற்ற ஒலிம்பிக் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன் ஏற்றி வைத்தார்.
இதன்பிறகு மாணவ– மாணவிகளின் உடற்பயிற்சி நடனம், ஏரோபிக் நடனம், கிரிக்கெட்டி நடனம், யோகா போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்தன. ஸ்கேட்டிங் மாணவர்களும் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
விழாவில் ரிலே, 10 மீட்டர் ஒட்டப்பந்தயம் உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன.
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மாணவர் சிபி அஷ்வந்த் முதல் பரிசும், சதிஷ் குமார் 2–வது பரிசும், அஜித் 3–வது பரிசும், பெற்றனர்.
அனைத்து போட்டி களிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் விளையாட்டு அறிக்கையை உடல்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் வாசித்தார். நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்த குமார் பிரதீப், முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி நிறுவனங்களின் கல்வி ஆலோசகர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் கங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 32). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகி...
-
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர்...
-
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு....
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர...
-
திருப்பூர் சாமுண்டிபுரத்திலுள்ள டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி, அந்த கடையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும், இந்திய...
0 comments:
Post a Comment