Wednesday, August 27, 2014
மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ஆற்றில் விநாயகர் சிலை கரைக்குமிடத்தில் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரும் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மதுரையில் கடந்த ஆண்டு 162 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டன. தற்போது அவ்வமைப்பினர் 180 இடங்களுக்கும் அதிகமாக விநாயகர் திருவுருவச் சிலைகள் வைக்க காவல் துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு புதிய இடங்களில் சிலைகள் வைக்க காவல் துறை அனுமதி தரத் தயங்கிவருகிறது.
விநாயகர் சிலைகளுக்கு தலா 2 போலீஸார் என சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கவும், சிலை அமைப்புக் குழுவினரும் போலீஸாருடன் சேர்ந்து பாதுகாப்பில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகரில், விநாயகர் சிலைகள் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு சிவசேனை ஆகியவை சார்பில் நிறுவப்படுவதாக போலீஸார் கூறினர். அதன்படி, 29-ம் தேதி மாலையிலிருந்து விநாயகர் சிலை கரைக்கும் ஊர்வலம் நடைபெறுகிறது.
கீழமாசி வீதி விநாயகர் கோயில் முன்பிருந்து புறப்படும் விநாயகர் சிலை ஊர்வலமானது தெற்கு, மேல மாசி வீதிகள் வழியாக வடக்குமாசி வீதி வந்து, பழைய சொக்கநாதர் கோயில் வழியாக தைக்கால் தெருவை அடையும்.
பின்னர், திருமலைராயர் படித்துறை பகுதியில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலைகள் கரைக்கும் இடம் வருவாய்த் துறையினரால் ஆழப்படுத்தப்பட்டு, நீர் நிரம்பியிருக்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்து முன்னணி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கே.எம்.பாண்டியன் தலைமையில் மாநகர் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரை செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து, விநாயகர் சிலை அமைப்பது குறித்து பேசியுள்ளனர்.
அப்போது புதிய இடங்களில் சிலை அமைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் குறித்து போலீஸ் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
நகரில் மாட்டுத்தாவணி, காளவாசல், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் சாலையோரஙக்ளில் இப்போதே சிறிய விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காதிகிராப்ட் உள்ளிட்ட விற்பனை மையங்களில் விநாயகர் சிலைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
0 comments:
Post a Comment