Wednesday, August 27, 2014
மதுரையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் ஆற்றில் விநாயகர் சிலை கரைக்குமிடத்தில் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரும் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மதுரையில் கடந்த ஆண்டு 162 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டன. தற்போது அவ்வமைப்பினர் 180 இடங்களுக்கும் அதிகமாக விநாயகர் திருவுருவச் சிலைகள் வைக்க காவல் துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு புதிய இடங்களில் சிலைகள் வைக்க காவல் துறை அனுமதி தரத் தயங்கிவருகிறது.
விநாயகர் சிலைகளுக்கு தலா 2 போலீஸார் என சுழற்சி முறையில் பாதுகாப்பு அளிக்கவும், சிலை அமைப்புக் குழுவினரும் போலீஸாருடன் சேர்ந்து பாதுகாப்பில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகரில், விநாயகர் சிலைகள் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு சிவசேனை ஆகியவை சார்பில் நிறுவப்படுவதாக போலீஸார் கூறினர். அதன்படி, 29-ம் தேதி மாலையிலிருந்து விநாயகர் சிலை கரைக்கும் ஊர்வலம் நடைபெறுகிறது.
கீழமாசி வீதி விநாயகர் கோயில் முன்பிருந்து புறப்படும் விநாயகர் சிலை ஊர்வலமானது தெற்கு, மேல மாசி வீதிகள் வழியாக வடக்குமாசி வீதி வந்து, பழைய சொக்கநாதர் கோயில் வழியாக தைக்கால் தெருவை அடையும்.
பின்னர், திருமலைராயர் படித்துறை பகுதியில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலைகள் கரைக்கும் இடம் வருவாய்த் துறையினரால் ஆழப்படுத்தப்பட்டு, நீர் நிரம்பியிருக்கும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்து முன்னணி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் கே.எம்.பாண்டியன் தலைமையில் மாநகர் போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரை செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து, விநாயகர் சிலை அமைப்பது குறித்து பேசியுள்ளனர்.
அப்போது புதிய இடங்களில் சிலை அமைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் குறித்து போலீஸ் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
நகரில் மாட்டுத்தாவணி, காளவாசல், பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் சாலையோரஙக்ளில் இப்போதே சிறிய விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. காதிகிராப்ட் உள்ளிட்ட விற்பனை மையங்களில் விநாயகர் சிலைகள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment