Wednesday, August 27, 2014
மேலூர், ஆக. 26:   மேலூர் ஊராட்சி ஒன்றியம் புலிப்பட்டி 
நடுநிலைப்பள்ளியில் மூன்று மடிக்கணினிகள் திருடு போனது தொடர்பாக, போலீஸார் 
ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஆசிரியர்களிடையே ஏற்பட்ட 
பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் பள்ளியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு 
போராட்டம் நடத்தினர்.
இப்பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று மடிக்கணினிகள் திருடுபோனது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இதுதொடர்பாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடமும் விசாரித்தனர்.
இதையடுத்து, ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைக்கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மேலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலர் சின்னவெள்ளைச்சாமி அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இப்பள்ளியில் மாணவர்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று மடிக்கணினிகள் திருடுபோனது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியை மேலவளவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இதுதொடர்பாக பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடமும் விசாரித்தனர்.
இதையடுத்து, ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதைக்கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மேலூர் உதவித் தொடக்க கல்வி அலுவலர் சின்னவெள்ளைச்சாமி அனைவரையும் சமாதானப்படுத்தினார்.
இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 - 
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
 
0 comments:
Post a Comment