Wednesday, August 27, 2014
கண் சிகிச்சைக்கு மதுரைக்கு வந்த நைஜீரிய நாட்டுப் பெண் அரசு
மருத்துவமனையில் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுளளார். அவருக்கு எபோலா
பாதிப்புள்ளதா எனக் கண்காணிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.
ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது எபோலா வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் விடுத்த எபோலா எச்சரிக்கையை அடுத்து, ஆப்பிரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு வருவோரை எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியும் சோதனைக்கு உள்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனையில் எபோலா பாதிப்புக்கு உள்ளானவர்களைப் பரிசோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் 4 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நைஜீரியா நாட்டிலிருந்து மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்கு சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண் வந்துள்ளார்.
அப் பெண்ணுக்கு தொண்டையில் வலி, தலை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன. இதையடுத்து, அவரை எபோலா பரிசோதனைக்கு உள்படுத்துவது அவசியம் என மருத்துவர்கள் கருதியுள்ளனர். இதையடுத்து அவரிடம் கேட்டபோது, அவர் தனது மருத்துவ ஆவணங்களைக் காட்டியுள்ளார். அதில் அவர் ஏற்கெனவே எச்ஐவி பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பெண் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு ஏஆர்டி சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
அதன் பின்னர், அவர் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை மாவட்ட மலேரியா அதிகாரி உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.
நைஜீரியப் பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, அப் பெண்ணுக்கு எபோலா பாதிப்பில்லை. ஆனாலும், எச்ஐவி பாதிப்புள்ளதாகக் கூறப்படுவதால், தனிமைப்படுத்தி எபோலா உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது என்றனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது எபோலா வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் விடுத்த எபோலா எச்சரிக்கையை அடுத்து, ஆப்பிரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு வருவோரை எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியும் சோதனைக்கு உள்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனையில் எபோலா பாதிப்புக்கு உள்ளானவர்களைப் பரிசோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் 4 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நைஜீரியா நாட்டிலிருந்து மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்கு சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண் வந்துள்ளார்.
அப் பெண்ணுக்கு தொண்டையில் வலி, தலை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன. இதையடுத்து, அவரை எபோலா பரிசோதனைக்கு உள்படுத்துவது அவசியம் என மருத்துவர்கள் கருதியுள்ளனர். இதையடுத்து அவரிடம் கேட்டபோது, அவர் தனது மருத்துவ ஆவணங்களைக் காட்டியுள்ளார். அதில் அவர் ஏற்கெனவே எச்ஐவி பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பெண் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு ஏஆர்டி சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
அதன் பின்னர், அவர் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை மாவட்ட மலேரியா அதிகாரி உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.
நைஜீரியப் பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, அப் பெண்ணுக்கு எபோலா பாதிப்பில்லை. ஆனாலும், எச்ஐவி பாதிப்புள்ளதாகக் கூறப்படுவதால், தனிமைப்படுத்தி எபோலா உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் கோகுல இந்திரா,. மாவட்ட செயலா...
-
P.R. No.374 Date:22.07.2016 PRESS RELEA...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
Canara Bank Officers Association as a part of its social commitment to the society. The social service wing CANPAL donated about 1500 ...
-
திருச்சி - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் கூட்டம் வராத நிலையில் அவை தொடர்ந்து இயக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்நி...
-
நரைய்னியா கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவர்களிடம், மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது 7-ம் வகுப்பு படித்துவந்த 13 வய...
-
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 530 பதவிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கண...
0 comments:
Post a Comment