Wednesday, August 27, 2014
கண் சிகிச்சைக்கு மதுரைக்கு வந்த நைஜீரிய நாட்டுப் பெண் அரசு 
மருத்துவமனையில் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுளளார். அவருக்கு எபோலா  
பாதிப்புள்ளதா எனக் கண்காணிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறினர். 
ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது எபோலா வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் விடுத்த எபோலா எச்சரிக்கையை அடுத்து, ஆப்பிரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு வருவோரை எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியும் சோதனைக்கு உள்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனையில் எபோலா பாதிப்புக்கு உள்ளானவர்களைப் பரிசோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் 4 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நைஜீரியா நாட்டிலிருந்து மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்கு சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண் வந்துள்ளார்.
அப் பெண்ணுக்கு தொண்டையில் வலி, தலை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன. இதையடுத்து, அவரை எபோலா பரிசோதனைக்கு உள்படுத்துவது அவசியம் என மருத்துவர்கள் கருதியுள்ளனர். இதையடுத்து அவரிடம் கேட்டபோது, அவர் தனது மருத்துவ ஆவணங்களைக் காட்டியுள்ளார். அதில் அவர் ஏற்கெனவே எச்ஐவி பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பெண் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு ஏஆர்டி சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
அதன் பின்னர், அவர் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை மாவட்ட மலேரியா அதிகாரி உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.
நைஜீரியப் பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, அப் பெண்ணுக்கு எபோலா பாதிப்பில்லை. ஆனாலும், எச்ஐவி பாதிப்புள்ளதாகக் கூறப்படுவதால், தனிமைப்படுத்தி எபோலா உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது என்றனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது எபோலா வைரஸ் பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் விடுத்த எபோலா எச்சரிக்கையை அடுத்து, ஆப்பிரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு வருவோரை எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியும் சோதனைக்கு உள்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனையில் எபோலா பாதிப்புக்கு உள்ளானவர்களைப் பரிசோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் 4 படுக்கைகள் கொண்ட தனிப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நைஜீரியா நாட்டிலிருந்து மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்கு சுமார் 39 வயது மதிக்கத்தக்க பெண் வந்துள்ளார்.
அப் பெண்ணுக்கு தொண்டையில் வலி, தலை வலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன. இதையடுத்து, அவரை எபோலா பரிசோதனைக்கு உள்படுத்துவது அவசியம் என மருத்துவர்கள் கருதியுள்ளனர். இதையடுத்து அவரிடம் கேட்டபோது, அவர் தனது மருத்துவ ஆவணங்களைக் காட்டியுள்ளார். அதில் அவர் ஏற்கெனவே எச்ஐவி பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.
இதையடுத்து, அப்பெண் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு ஏஆர்டி சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
அதன் பின்னர், அவர் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை மாவட்ட மலேரியா அதிகாரி உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டுச் சென்றனர்.
நைஜீரியப் பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கேட்டபோது, அப் பெண்ணுக்கு எபோலா பாதிப்பில்லை. ஆனாலும், எச்ஐவி பாதிப்புள்ளதாகக் கூறப்படுவதால், தனிமைப்படுத்தி எபோலா உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
0 comments:
Post a Comment