Wednesday, August 27, 2014

மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இங்குள்ள 1–வது வார்டில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் கூறினர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்களும் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கீழவளவு சப்– இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு ரமேஷ், வெள்ளலூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னபொண்ணு மகாலிங்கம் ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பொண்ணு மகாலிங்கம் கூறும்போது, சில இடங்களில் அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இவைகள் சீர் செய்யப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
0 comments:
Post a Comment