Wednesday, August 27, 2014

திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் 4500–க்கு மேல் குடி தண்ணீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
குடிதண்ணீர் 10 நாட்களுக்கு ஒருமுறை 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யும் போது ஒரு சிலர் அதிக சக்தி கொண்ட மின்மோட்டார்களைக் கொண்டு குடிதண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.
குடிப்பதற்கு மட்டும் வினியோகிக்கப்படும் குடிதண்ணீரை ஒரு சிலர் கழிவறை, மற்றும் வீடுகள் சுத்தம் செய்ய தங்களுடைய கார், பைக், வாகனங்களை கழுவுவதற்கு மின்மோட்டார் மூலம் எடுக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மேடான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிதண்ணீர் சீராக கிடைப்பதில்லை என கடந்த 3 வருடங்களாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
பேரூராட்சி நிர்வாகம் குடிதண்ணீர் வினியோகம் செய்யும் போது ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் சென்று சுமார் 80 மோட்டார்களை பறிமுதல் செய்தது. ஆனால் சின்னாளபட்டியில் 1000–க்கும் மேல் உள்ள வீடுகளில் மின்மோட்டார்களை வைத்து தண்ணீர் எடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சம் இன்றி அனைத்து வார்டுகளுக்கும் சென்று மின்மோட்டார் மூலம் குடிதண்ணீர் உறிஞ்சுவதைக் கண்டுபிடித்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான 'ஜி மெயிலை' பயன்படுத்துவதற்கு எஞ்சியிருந்த அனைத்து வழிகளையும் கிட்டத்தட்ட ...
-
திருச்சி 1.1.15 திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார். இந்தி...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
கோவை: கோவையில் வாக்களர்களுக்கு பணம் தந்த கட்சித்தொண்டருக்கு அடி உதை கொடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கவுண்டம்பாளையத்தில் பணம் தந்...
-
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.காந்தி, ராணிப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு உதவியாளராக ராணிப்பேட்டை...
0 comments:
Post a Comment