Wednesday, August 27, 2014

மதுரை தெய்வநெறிக் கழகத்தில் திரிவேணி விழா 1–ந்தேதி தொடங்கி 8–ந்தேதி வரை நடக்கிறது.
இது குறித்து மதுரை தெய்வநெறிக் கழகம் மற்றும் சிவானந்த தபோவனத்தின் தலைவர் ஸ்ரீ சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:–
குருதேவர் ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் 128–வது ஜெயந்தி விழா மதுரை தெய்வநெறி கழகத்தின் 76–வது ஆண்டுவிழா மற்றும் மதுரை சிவானந்த தபோவனத்தின் 47–வது ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா திரிவேணி விழாவாக செப்டம்பர் 1–ம் தேதிமுதல் 8–ம் தேதி வரை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள தெய்வநெறிக் கழகத்திலும், மாலையில் தினசரி 6 மணி முதல் சங்கீர்த்தன நிகழ்ச்சியும், 7 மணி முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மீனாட்சி கோவில் வடக்காடி வீதி, திருவள்ளுவர் கழகத்திலும் நடைபெற உள்ளது.
1–ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை, ஆல் இந்தியா ரேடியோ உதவி நிலைய இயக்குநர் அசோக் விழாவினை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன்பின்னர் தமிழகத்தின் தவப்புதல்வர் சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் பேராசிரியர் ஞான சம்பந்தன் சிறப்புரையும் மறுநாள் (2–ந்தேதி) மாலையில் ஞானியார் மரபில் சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
மாலையில் குரு மகிமையும்–நாம மகிமையும் என்ற தலைப்பில் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் சிஷ்யர் ப்ரும்ம ஸ்ரீ ராமானுஜம் சிறப்புரையும், 4–ந்தேதி புட்டு திருவிழாவை முன்னிட்டு நடை சாத்தப்படுவதால் காலை நிகழ்ச்சி சொக்கப்ப நாயக்கன் தெரு, ரமண மந்திரத்திலும், மாலையில் மேலமாசி வீதி, மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பரணி போற்றும் பார் புகழ் சிவானந்தர் என்ற தலைப்பில் ராஜகோபால கனபாடிகள் சிறப்புரையும் நடக்கிறது.
5–ந்தேதி மாலையில் பத்தமடை தந்த பரமஞானி சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் சிறப்புரையும், 6–ந்தேதி மாலையில் சன்மார்க்க தந்தை சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜோதி ராமகிருஷ்ணா சொற்பொழிவும், 7–ந்தேதி மாலையில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் சிந்தனை மன்றம் நடக்கிறது.
குருதேவர் சுவாமி சிவானந்தர் பெரிதும் வலியுறுத்துவது பக்தி நெறியையே என பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், ரேவதி சுப்புலெட்சுமி ஆகியோரும் தொண்டு நெறியையே என பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன், ராஜா ஆகியோரும் கருத்து கூறுகின்றனர்.
8–ந்தேதி மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சியாக மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இணை பேராசிரியை பாலா நந்தகுமார் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் நடராஜன் பரிசுகள் வழங்குகிறார். மேற்கண்ட அனைத்து நாட்களிலும் காலையில் 6 மணிக்கு கீதைப்பாராயணமும், 7 மணிக்கு கைவல்ய நவநீதம் என்னும் தலைப்பில் தென்காசி ஜகத்குரு ஸ்ரீ வேதவியாச ஆசிரமம் தலைவர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி அநந்தானந்த சரஸ்வதி தொடர் விரிவுரையும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை தெய்வநெறிக் கழகம் மற்றும் சிவானந்த தபோவனத்தின் தலைவர் ஸ்ரீ சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:–
குருதேவர் ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் 128–வது ஜெயந்தி விழா மதுரை தெய்வநெறி கழகத்தின் 76–வது ஆண்டுவிழா மற்றும் மதுரை சிவானந்த தபோவனத்தின் 47–வது ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா திரிவேணி விழாவாக செப்டம்பர் 1–ம் தேதிமுதல் 8–ம் தேதி வரை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள தெய்வநெறிக் கழகத்திலும், மாலையில் தினசரி 6 மணி முதல் சங்கீர்த்தன நிகழ்ச்சியும், 7 மணி முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மீனாட்சி கோவில் வடக்காடி வீதி, திருவள்ளுவர் கழகத்திலும் நடைபெற உள்ளது.
1–ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை, ஆல் இந்தியா ரேடியோ உதவி நிலைய இயக்குநர் அசோக் விழாவினை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன்பின்னர் தமிழகத்தின் தவப்புதல்வர் சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் பேராசிரியர் ஞான சம்பந்தன் சிறப்புரையும் மறுநாள் (2–ந்தேதி) மாலையில் ஞானியார் மரபில் சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
மாலையில் குரு மகிமையும்–நாம மகிமையும் என்ற தலைப்பில் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் சிஷ்யர் ப்ரும்ம ஸ்ரீ ராமானுஜம் சிறப்புரையும், 4–ந்தேதி புட்டு திருவிழாவை முன்னிட்டு நடை சாத்தப்படுவதால் காலை நிகழ்ச்சி சொக்கப்ப நாயக்கன் தெரு, ரமண மந்திரத்திலும், மாலையில் மேலமாசி வீதி, மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பரணி போற்றும் பார் புகழ் சிவானந்தர் என்ற தலைப்பில் ராஜகோபால கனபாடிகள் சிறப்புரையும் நடக்கிறது.
5–ந்தேதி மாலையில் பத்தமடை தந்த பரமஞானி சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் சிறப்புரையும், 6–ந்தேதி மாலையில் சன்மார்க்க தந்தை சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜோதி ராமகிருஷ்ணா சொற்பொழிவும், 7–ந்தேதி மாலையில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் சிந்தனை மன்றம் நடக்கிறது.
குருதேவர் சுவாமி சிவானந்தர் பெரிதும் வலியுறுத்துவது பக்தி நெறியையே என பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், ரேவதி சுப்புலெட்சுமி ஆகியோரும் தொண்டு நெறியையே என பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன், ராஜா ஆகியோரும் கருத்து கூறுகின்றனர்.
8–ந்தேதி மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சியாக மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இணை பேராசிரியை பாலா நந்தகுமார் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் நடராஜன் பரிசுகள் வழங்குகிறார். மேற்கண்ட அனைத்து நாட்களிலும் காலையில் 6 மணிக்கு கீதைப்பாராயணமும், 7 மணிக்கு கைவல்ய நவநீதம் என்னும் தலைப்பில் தென்காசி ஜகத்குரு ஸ்ரீ வேதவியாச ஆசிரமம் தலைவர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி அநந்தானந்த சரஸ்வதி தொடர் விரிவுரையும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
0 comments:
Post a Comment