Wednesday, August 27, 2014
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது)
இவருக்கும், திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு
திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைபடுத்துவதாக குடும்ப நல வன்முறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திருச்சி கோர்ட்டில் கண்ணன் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யும்படி கண்ணன் குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணையின்போது, ‘‘கண்ணனுக்கு ஆண்மை குறைவு இருந்ததும், அதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு கீழ்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும் தெரியவந்தது’’.
இதை தொடர்ந்து இன்று நீதிபதி கிருபாகரன் மத்திய அரசுக்கு பல கேள்விகளை எழுப்பினார்.
ஆண்மைக் குறைவு, இல்லற உறவில் விருப்பம் இல்லாமை போன்ற காரணத்திற்காக குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினையை தடுக்க திருமணம் செய்து கொள்ளப்போகும் தம்பதிகளுக்கு, திருமணத்துக்கு முன்பு மருத்துவ பரிசோதனை கட்டாயம் என்ற சட்டத்தை ஏன் கொண்டு வரக்கூடாது?
குடும்பம் சம்பந்தப்பட்ட வழக்குகளை 6 மாதத்தில் இருந்து ஒரு ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்மைக் குறைவு இருப்பதை மறைத்து திருமணம் செய்தவரை தண்டிக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க ஏன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது? என்பது குறித்து மத்திய–மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
சென்னை: காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி ‘காந்திய வழியில் அம்மா ஆட்சி’ என்ற தலைப்பில் கல்லூரியில் போட்டிகளை நடத்துவதைக் கைவிட்டு, காந...
-
உயர்கல்வியில் வளர்ச்சி கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் பெருந்துறை கொங்கு என்ஜினீயரிங் கல்லூரியில் நிறுவனர் தின விழா...
-
ஈரோடு புத்தகத்திருவிழாவின் ஐந்தாம்நாள் சிந்தனை அரங்க நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குத்தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி நிறுவனங்க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் பிச்சம்பாளையம் புதூர் கிளை துவக்க விழா நடந்தது. தமிழக வனத்துறை .எம்.எஸ்.எம...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
0 comments:
Post a Comment