Saturday, August 09, 2014
முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் மோசடியில் ஈடுபட்டதாக கடந்த 2012-ம் ஆண்டு கீழவளவு போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்றேன். அந்த சமயத்தில், நான் வெளிநாடு செல்வதற்கு முன்பும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய பின்பும் மேலூர் கோர்ட்டில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. நான் திரைப்படம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறேன். இதற்காக, படப்பிடிப்பு குழுவினருடன் அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. கோர்ட்டு விதித்துள்ள நிபந்தனையால் தொழில் ரீதியாக பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே, வெளிநாடு செல்லும் தகவலை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...