Saturday, August 09, 2014
திருமங்கலம் பாண்டியன் நகரில் குடியிருப்பவர் ஷேக்மைதீன். இவருக்கு பகீர்முகமது (வயது32), காதர் மைதீன்(28) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
பகீர்முகமது திருமணமாகி பரமக்குடியில் உள்ளார். இவர் பூ கட்டி விற்பனை செய்கிறார். காதர்மைதீன் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். காதர்மைதீனுக்கு பகீர்முகமது மனைவியின் தங்கையை நிச்சயம் செய்து வருகிற 31–ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக திருமணம் செய்ய விருப்பமில்லை என காதர்மைதீன் கூறி உள்ளார். இதனால் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
சம்பவத்தன்று வீட்டின் மாடியில் இருந்த காதர் மைதீனை, அண்ணன் பகீர் முகமது சந்தித்து பேசி உள்ளார்.
வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த பகீர் முகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதர்மைதீனின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்.
உடனடியாக திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி. அரசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காதர்மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் தப்பி ஓடிய பகீர்முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...