Saturday, August 09, 2014
திருமங்கலம் பாண்டியன் நகரில் குடியிருப்பவர் ஷேக்மைதீன். இவருக்கு பகீர்முகமது (வயது32), காதர் மைதீன்(28) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
பகீர்முகமது திருமணமாகி பரமக்குடியில் உள்ளார். இவர் பூ கட்டி விற்பனை செய்கிறார். காதர்மைதீன் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். காதர்மைதீனுக்கு பகீர்முகமது மனைவியின் தங்கையை நிச்சயம் செய்து வருகிற 31–ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக திருமணம் செய்ய விருப்பமில்லை என காதர்மைதீன் கூறி உள்ளார். இதனால் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
சம்பவத்தன்று வீட்டின் மாடியில் இருந்த காதர் மைதீனை, அண்ணன் பகீர் முகமது சந்தித்து பேசி உள்ளார்.
வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த பகீர் முகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதர்மைதீனின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்.
உடனடியாக திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி. அரசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காதர்மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் தப்பி ஓடிய பகீர்முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...