Saturday, August 09, 2014
திருமங்கலம் பாண்டியன் நகரில் குடியிருப்பவர் ஷேக்மைதீன். இவருக்கு பகீர்முகமது (வயது32), காதர் மைதீன்(28) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
பகீர்முகமது திருமணமாகி பரமக்குடியில் உள்ளார். இவர் பூ கட்டி விற்பனை செய்கிறார். காதர்மைதீன் வளையல் வியாபாரம் செய்து வருகிறார். காதர்மைதீனுக்கு பகீர்முகமது மனைவியின் தங்கையை நிச்சயம் செய்து வருகிற 31–ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக திருமணம் செய்ய விருப்பமில்லை என காதர்மைதீன் கூறி உள்ளார். இதனால் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
சம்பவத்தன்று வீட்டின் மாடியில் இருந்த காதர் மைதீனை, அண்ணன் பகீர் முகமது சந்தித்து பேசி உள்ளார்.
வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த பகீர் முகமது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதர்மைதீனின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்.
உடனடியாக திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி. அரசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காதர்மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் தப்பி ஓடிய பகீர்முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
புதிய தொழில் முனை வோரை ஊக்குவிக்கும் விதமாக 25 சதவீதம் மானியத்தில் தொழிற் கடனுதவிகள் வழங்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில்மையத்தின் பொது...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தமிழகத்தில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் முக்கியமானதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகைகள் மட்டும் இன்றி பிறந்த...
-
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்றது. தென் மண்டல அமைப்...
-
திருப்பூர்,பட்டாகேட்டு, 63 வேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகத்துக...
-
அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இரு நாடுகளும் தங்கள் உறவுகளில் சாதாரணம...
-
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்...