Thursday, August 28, 2014

பொள்ளாச்சி: ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சிக்கி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கைதி போலீசார் தூங்கும்போது தப்பி ஓடிவிட்டார்.கோவை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் டோல்கேட் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரள பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பின் தொடர்ந்தனர். கார் செல்வபுரம் முத்துசாமி காலனி எஸ்.ஏ. கார்டன் என்ற இடத்தில் உள்ள ஒரு குடோனுக்குள் சென்றது.போலீசார் அந்த குடோனுக்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தினர். போலீசாரை பார்த்ததும், காரில் இருந்தவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் உக்கடத்தைச் சேர்ந்த அபிப் ரகுமான் (39) என்றும், இவர் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் சிக்கி 4 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதன்பிறகு, அங்கிருந்த லாரியை சோதனையிட்டதில், அதிலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனால், 4 டன் ரேஷன் அரிசி, லாரி, ஒரு பைக், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
இந்திய நாட்டின் 68வது சுதந்திர தின விழாவை யொட்டி திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், ஆணையாளர் மா...
-
திருச்சி 05.07.2015 சபரிநாதன் 9443086297 திருச்சிராப்பள்ளி ( மேற்கு ) சட்டமன்றத் தொகுதியில் 4 253 இல...
0 comments:
Post a Comment