Saturday, August 16, 2014
போலீஸ் துறையில் புலன் விசாரணை பணியில் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் சுதந்திர தினத்தையொட்டி தமிழக முதல்வரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப்பதக்கங்கள் வழங்கப்படும். விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கம், ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசும் முதல்–அமைச்சர் வழங்குவார்.
கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்காக இந்த விருதுக்கு மதுரை திலகர்திடல் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011–ம் ஆண்டு தெப்பக்குளம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட காமராஜர் சாலையில் இளம்பெண் துர்காதேவி, மகன் ஸ்ரீராம் ஆகியோர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர். அந்த சம்பவம் தொடர்பாக கீரைத்துறையில் கிரைம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜன்பாபு தனி கவனம் எடுத்து விசாரணை நடத்தினார். அதில் சில மாதங்கள் கழித்து காளிமுத்து, முத்துப்பாண்டி, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 3 குற்றவாளிகளை கைது செய்தார். 3 ஆண்டுகளாக துப்பு துலக்க முடியாமல் இருந்த சிக்கலான வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ததால் ராஜன்பாபு, இந்தாண்டிற்கான சுதந்திர தின முதல்வர் தங்கப்பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் பிக்-பஜார் சார்பில் ரத்ததான முகாம் எம்.ஜி.பி.பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ப...
-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கட்டுரை, கவிதை போட...
0 comments:
Post a Comment