Thursday, August 28, 2014
சித்தோடு வாசவி கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி விற்பனை நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் சண்முகம் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வாசவி கல்லூரியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியினை கலெக்டர் சண்முகம் குத்துவிளக்கேற்றி வைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். இந்த கல்லூரி சந்தையில் ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்நத 37 மகளிர் சுயஉதவிக்குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் வைத்திருந்தனர். இதில் கோராப்பட்டு புடவைகள், காட்டன் புடவைகள், அழகு ஆபரணங்கள், சணல் மற்றும் காட்டன் பைகள், மென் பொம்மைகள், மெழுவர்த்தி, நாப்கின், சுடிதார், நைட்டி வகைகள், ஆயத்த ஆடைகள், பேன்சி பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் சார்பாக 22 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், பிற மாவட்டங்களில் இருந்து 15 மகளிர் சுயஉதவிக்குழுக்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர். இந்த கண்காட்சி விற்பனையை மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி செய்த பொருட்களை வாங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் ரேணுகாதேவி, கல்லூரி முதல்வர் ஜெயசங்கர், இயக்குநர் சிவக்குமார், உதவி தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் நித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
0 comments:
Post a Comment