Thursday, August 14, 2014

நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைய தலைமுறை எழுச்சி பெறவேண்டும் என்று சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
லட்சியம் வேண்டும்
சென்னிமலையில் உள்ள ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஒரு மரக்கன்றினை வழங்கி, ‘‘அறிவு அற்றம் காக்கும்’’ என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
பூமிக்கு கீழே பூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைவிட மன எழுச்சி கொண்ட இளைஞன்தான் மிகப்பெரிய சக்தி. இந்தியா 60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. எனவே மக்கள்தொகை இந்தியாவுக்கு மிகப்பெரிய சொத்து ஆகும்.
ஒவ்வொரு இளைஞரின் வாழ்க்கையிலும் லட்சியம் வேண்டும். அந்த லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவை பெற அதை தேடிச் செல்லுங்கள். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும். இந்த 4 குணங்களும் இருந்தால் கனவு நனவாகும். கற்றல் கற்பனை சக்தியை வளர்க்கிறது. கற்பனை சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது.
கனவு காணுங்கள்
சிந்தனை திறன் அறிவை வளர்க்கிறது. அறிவு நம்மை மகானாக ஆக்குகிறது. கற்பனை சக்தியை உருவாக்குவதற்கு குடும்ப சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும்தான் முக்கிய காரணங்களாக அமையும். அந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஒவ்வொருவரின் மனதிலும் தூய்மை வேண்டும். வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும்.
இளைஞர்கள் தோல்வி மனப்பான்மை, தவறான செய்திகள், ஊழல் சிந்தனை மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு தங்களது லட்சியம் வெற்றி பெற கனவு காண வேண்டும். அப்படிப்பட்ட கனவை ஒவ்வொரு இளைஞர்களின் மனதில் விதைக்க வேண்டும்.
நமது எண்ணங்கள் உயர்வாக இருந்தால் அரும்பெரும் லட்சியங்கள் தோன்றும். பெரும் லட்சியங்கள் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.
எழுச்சி பெறுக!
நாட்டின் சவால்களை எதிர்கொள்ள இளைய தலைமுறை எழுச்சி பெற வேண்டும். மாணவ, மாணவிகளின் ஆராய்ச்சி மற்றும் சிந்தனை வளர்க்கும் திறனை கல்வி நிறுவனங்கள் தூண்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், அரசு தொழில்நுட்ப கல்வி இயக்கக கூடுதல் இயக்குனர் சுந்தரமூர்த்தி, ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் மக்கள் ஜி.ராஜன், கல்லூரி முதல்வர் வஜ்ரவேல், சோபனா ராஜன், தொழில் அதிபர் சாந்தி துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
விருதுநகர் லட்சுமி நகரில் காவல் துறை சார்பில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கான விழிப்பு...
-
விருதுநகர் மாவட்டத்தில் சிறு கோவில்களுக்கு ரூ.5.7 லட்சம் மதிப்பிலான பூஜை உபகரணங்களை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆ...
-
புதுக்கோட்டை மாவட்டம் ராஜ்குமார் என்பவர் எல்பின் நிறுவனத்தின் மீது மோசடி புகார் அவர் குறிப்பிட்ட புகார் மனுவில் கடந்த 2011 முதல் 201...
-
திருச்சி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் வைத்துள்ள விநாயகர் சிலைகளின் விவரங்கள் பின்வருமாறு... திருச்சி மாநகர் - 203, திரு...
-
திருச்சி திருச்சியில் மளிகைப் பொருட்கள் தொகுப்பை அமைச்சர் வழங்கினார். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிற...
-
திருச்சி 10.9.16 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூ h யில் ஓனம் பண்டிகை கொண்டாடப்பட்டது . மாகாபலி சக்கரவர்த்தி விஷ்ணு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 20.11.16 முகநூல் நண்பர்களால் சென்ற வருடம் ஆரம்பிக்கப்பட்ட எய்ம .; டு . ஹை டிரஸ்டின் சார்பாக மற்றும் ஜெயம் பன்மருத்து...
0 comments:
Post a Comment