Tuesday, August 26, 2014

On Tuesday, August 26, 2014 by TAMIL NEWS TV in ,    


ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நுழைவு வாயில் கதவு திறப்பு விழா, ரத்ததான முகாம், மருத்துவ முகாம், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவை நடந்தது. ஜேசீஸ் இயக்க உலக தலைவர் டி.பாஸ்கரன் தலைமை தாங்கி நுழைவு வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததுடன், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ரத்ததான முகாமை ஜேசீஸ் தேசிய தலைவர் தீபக் நகார் தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமை 17–வது மண்டல ஜேசீஸ் நிர்வாகி எஸ்.எம்.பழனியப்பன் தொடங்கி வைத்தார். ரத்ததான முகாமில் 64 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். மருத்துவ முகாமில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ–மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கண் மற்றும் பற்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

0 comments: