Wednesday, August 27, 2014
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையில் செவ்வாய்க்கிழமை முதல் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டது.
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையை அகலப்படுத்தி, கணினி மூலம் வாகனக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஓராண்டுக்கு முன்பு உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம், கடன்தவணைத் தொகை செலுத்தியது போக, மீதமிருந்த சுமார் ரூ.22 கோடி நிதியில் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 5 சுங்கச்சாவடிகளில் மேற்கூரைகள் அமைத்தல் மற்றும் அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கே அந்தத் தொகை செலவிடப்பட்டதாக, மாநகராட்சி தரப்பில் கணக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. கணினி மூலம் கட்டண வசூல் நடைபெறாததால், தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இச்சாலையை மேம்படுத்தவும், அகலப்படுத்தி கணினி முறையில் வாகனக் கட்டண வசூலுக்கு தங்களது சாலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினர் கடிதங்கள் எழுதியும், சாலையை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. அடிக்கடி சாலையில் விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையை அகலப்படுத்த ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள இருப்பதாகவும், இச்சாலையை அத்துறையினரிடம் ஒப்படைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு உள்வட்ட சுற்றுச் சாலையில் அவசர அவசரமாக கணினிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முதல் உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறையை ஆணையாளர் சி.கதிரவன் முன்னிலையில் மேயர் விவி ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி நடைபெற்றுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகரபொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, தேவதாஸ், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையை அகலப்படுத்தி, கணினி மூலம் வாகனக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஓராண்டுக்கு முன்பு உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம், கடன்தவணைத் தொகை செலுத்தியது போக, மீதமிருந்த சுமார் ரூ.22 கோடி நிதியில் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 5 சுங்கச்சாவடிகளில் மேற்கூரைகள் அமைத்தல் மற்றும் அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கே அந்தத் தொகை செலவிடப்பட்டதாக, மாநகராட்சி தரப்பில் கணக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. கணினி மூலம் கட்டண வசூல் நடைபெறாததால், தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இச்சாலையை மேம்படுத்தவும், அகலப்படுத்தி கணினி முறையில் வாகனக் கட்டண வசூலுக்கு தங்களது சாலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினர் கடிதங்கள் எழுதியும், சாலையை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. அடிக்கடி சாலையில் விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையை அகலப்படுத்த ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள இருப்பதாகவும், இச்சாலையை அத்துறையினரிடம் ஒப்படைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு உள்வட்ட சுற்றுச் சாலையில் அவசர அவசரமாக கணினிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முதல் உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறையை ஆணையாளர் சி.கதிரவன் முன்னிலையில் மேயர் விவி ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி நடைபெற்றுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகரபொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, தேவதாஸ், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
உசிலம்பட்டி தமிழ்நாடு பாலிடெக்னிக் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்பாட்டத்தில் ...
-
மாயமான ஏர் ஏசியா QZ8501 விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ஜாவா கடலில் இந்தோனேசியா மீட்பு குழுவினரால் கண்டுபிடிக்க...
0 comments:
Post a Comment