Wednesday, August 27, 2014
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையில் செவ்வாய்க்கிழமை முதல் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டது.
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையை அகலப்படுத்தி, கணினி மூலம் வாகனக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஓராண்டுக்கு முன்பு உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம், கடன்தவணைத் தொகை செலுத்தியது போக, மீதமிருந்த சுமார் ரூ.22 கோடி நிதியில் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 5 சுங்கச்சாவடிகளில் மேற்கூரைகள் அமைத்தல் மற்றும் அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கே அந்தத் தொகை செலவிடப்பட்டதாக, மாநகராட்சி தரப்பில் கணக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. கணினி மூலம் கட்டண வசூல் நடைபெறாததால், தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இச்சாலையை மேம்படுத்தவும், அகலப்படுத்தி கணினி முறையில் வாகனக் கட்டண வசூலுக்கு தங்களது சாலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினர் கடிதங்கள் எழுதியும், சாலையை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. அடிக்கடி சாலையில் விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையை அகலப்படுத்த ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள இருப்பதாகவும், இச்சாலையை அத்துறையினரிடம் ஒப்படைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு உள்வட்ட சுற்றுச் சாலையில் அவசர அவசரமாக கணினிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முதல் உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறையை ஆணையாளர் சி.கதிரவன் முன்னிலையில் மேயர் விவி ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி நடைபெற்றுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகரபொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, தேவதாஸ், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையை அகலப்படுத்தி, கணினி மூலம் வாகனக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஓராண்டுக்கு முன்பு உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம், கடன்தவணைத் தொகை செலுத்தியது போக, மீதமிருந்த சுமார் ரூ.22 கோடி நிதியில் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 5 சுங்கச்சாவடிகளில் மேற்கூரைகள் அமைத்தல் மற்றும் அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கே அந்தத் தொகை செலவிடப்பட்டதாக, மாநகராட்சி தரப்பில் கணக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. கணினி மூலம் கட்டண வசூல் நடைபெறாததால், தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இச்சாலையை மேம்படுத்தவும், அகலப்படுத்தி கணினி முறையில் வாகனக் கட்டண வசூலுக்கு தங்களது சாலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினர் கடிதங்கள் எழுதியும், சாலையை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. அடிக்கடி சாலையில் விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையை அகலப்படுத்த ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள இருப்பதாகவும், இச்சாலையை அத்துறையினரிடம் ஒப்படைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு உள்வட்ட சுற்றுச் சாலையில் அவசர அவசரமாக கணினிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முதல் உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறையை ஆணையாளர் சி.கதிரவன் முன்னிலையில் மேயர் விவி ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி நடைபெற்றுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகரபொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, தேவதாஸ், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment