Wednesday, August 27, 2014

வாடிப்பட்டி பெரியாறு பிரதான கால்வாய் (பி.டி.4) பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கட்டக்குளம் ராமசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
முல்லைபெரியாறு பாசன விவசாயிகள் பருவமழைகள் பொய்த்துபோனதால் விவசாயம் செய்ய முடியாமல் வேதனையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரியாறு அணையில் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்ததால் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பெரியாறு அணையில் தண்ணீர் 2 ஆயிரம் மில்லியன் கன அடி வந்தவுடன் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கும், 4ஆயிரம் அடி வந்தவுடன் பேரனை முதல் கள்ளந்திரி வரை உள்ள இருபோக சாகுபடி நிலங்களுக்கும், 6 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் ஒருபோக சாகுபடி நிலங்களுக்கும், 7 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் விரிவாக்க பகுதி நிலங்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பெரியாறுபாசன நீர் பங்கீட்டின் விதிமுறைகளாகவும் அதனை நடைமுறை படுத்தவும் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த விதிமுறைப்படி தற்போது கம்பம் பகுதிக்கு அடுத்து பேரனை முதல் கள்ளந்திரி வரை இருபோக சாகுபடி ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீரை உடனே திறந்து விடவேண்டும். காரணம் கண்மாய் வசதியற்ற இப்பகுதி விவசாயிகள் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் விவசாயத்தை செய்திட முடியும். 6 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் ஒரு போக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறந்தால் கண்மாய் வசதி கொண்ட அப்பகுதி விவசாயிகள் நீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும். ஆனால் தற்போது 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தபின்பும் இதுவரை திறக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் வேதனையை அதிக படுத்தி வருகிறது.
எனவே விவசாயிகளின் நலன் கருதி பெரியாறு அணையின் உரிமையை நிலைநாட்டிய தமிழக முதல்வர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு நீர்பங்கீட்டிற்கு நீதிகிடைத்திட வைகை அணையிலிருந்து பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்திட உத்தரவு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment