Wednesday, August 27, 2014

வாடிப்பட்டி பெரியாறு பிரதான கால்வாய் (பி.டி.4) பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கட்டக்குளம் ராமசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
முல்லைபெரியாறு பாசன விவசாயிகள் பருவமழைகள் பொய்த்துபோனதால் விவசாயம் செய்ய முடியாமல் வேதனையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரியாறு அணையில் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்ததால் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பெரியாறு அணையில் தண்ணீர் 2 ஆயிரம் மில்லியன் கன அடி வந்தவுடன் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கும், 4ஆயிரம் அடி வந்தவுடன் பேரனை முதல் கள்ளந்திரி வரை உள்ள இருபோக சாகுபடி நிலங்களுக்கும், 6 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் ஒருபோக சாகுபடி நிலங்களுக்கும், 7 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் விரிவாக்க பகுதி நிலங்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பெரியாறுபாசன நீர் பங்கீட்டின் விதிமுறைகளாகவும் அதனை நடைமுறை படுத்தவும் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த விதிமுறைப்படி தற்போது கம்பம் பகுதிக்கு அடுத்து பேரனை முதல் கள்ளந்திரி வரை இருபோக சாகுபடி ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீரை உடனே திறந்து விடவேண்டும். காரணம் கண்மாய் வசதியற்ற இப்பகுதி விவசாயிகள் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் விவசாயத்தை செய்திட முடியும். 6 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் ஒரு போக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறந்தால் கண்மாய் வசதி கொண்ட அப்பகுதி விவசாயிகள் நீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும். ஆனால் தற்போது 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தபின்பும் இதுவரை திறக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் வேதனையை அதிக படுத்தி வருகிறது.
எனவே விவசாயிகளின் நலன் கருதி பெரியாறு அணையின் உரிமையை நிலைநாட்டிய தமிழக முதல்வர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு நீர்பங்கீட்டிற்கு நீதிகிடைத்திட வைகை அணையிலிருந்து பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்திட உத்தரவு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவாக, திருப்பூரில் 12வது ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழா இந்த நகர மக்கள் மத்தியில் வாசிப...
-
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
கடந்த 2–ந்தேதி ராமேசுவரத்தை சேர்ந்த உயிர்த்தராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் படகு மூழ்கியதில் கடலில...
-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத், குடும்பத்தினருடன் விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், கோட்டாட்சியர் ஆறுமுக...
-
அந்தமானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்திந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் திருச்சியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி...
-
விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அ...
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
0 comments:
Post a Comment