Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
திருச்சியில் 13–வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயிகள் நேற்று கண்களை கறுப்பு துணியால் கட்டி கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், கைகளில் கம்பு, சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதன போராட்டம்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நதிகளை இணைத்து தேசிய நதிவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகள் திருச்சி அண்ணாசிலை அருகில் கடந்த 5–ந்ம் தேதி முதல் மாநில துணை தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உண்ணாவிரதத்தில் விவசாயிகள் ஒவ்வெரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 13–வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. அப்போது விவசாயிகள் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்தும், ஒரு கையில் கம்புடனும், மற்றொரு கையில் சட்டி ஏந்தியும் போராட்டம் செய்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகிறது.

0 comments: