Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
சமயபுரத்தில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பூனாட்சி வழங்கினார்.

விலையில்லா சைக்கிள்கள்

சமயபுரம் மாரியம்மன் கோவில் மேல்நிலைப்பள்ளியில் 103 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் பூனாட்சி கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:–

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் ஒதுக்கீடு செய்யாத நிதியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா பள்ளி கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்து வருகிறார். மேலும் கல்வி கற்கும் மாணவ–மாணவிகள் எந்த சிரமமும் இல்லாமல் படிக்கும் வகையில் 14 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது.

நிம்மதியாக வாழலாம்

மாணவ–மாணவிகளின் கல்வி தரம் உயர்வதால் அந்த மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ளவர்கள் மாநிலமாக தமிழகம் விரைவில் திகழும். மாணவ–மாணவிகள் 20 வயது வரை கஷ்டப்பட்டு படித்தால் நிம்மதியாக வாழலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட கவுன்சிலர் அரிசி மூக்கன், குணசீலம் ஊராட்சி தலைவர் சத்யநாராயணன், சிறுகாம்பூர் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், ச.கண்ணனூர் பேரூராட்சி தலைவர் அம்சவள்ளி, ஒன்றிய குழு துணை தலைவர் வெற்றிசெல்வி தர்மலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் முருகேசன், பாசறை ஒன்றிய தலைவர் சமயபுரம் கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

0 comments: