Thursday, September 11, 2014
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் பிரசார களம் சூடு பிடித்துள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி.வேலுமணி உள்பட அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15–ந் தேதி கோவை வருகிறார். கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் அவர் கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கு இன்று கால்கோள் விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு கருதி வ.உ.சி. மைதானம் இப்போதே போலீசின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment