Thursday, September 11, 2014
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் பிரசார களம் சூடு பிடித்துள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி.வேலுமணி உள்பட அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15–ந் தேதி கோவை வருகிறார். கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் அவர் கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கு இன்று கால்கோள் விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு கருதி வ.உ.சி. மைதானம் இப்போதே போலீசின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment