Thursday, September 11, 2014
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருப்பதால் பிரசார களம் சூடு பிடித்துள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி.வேலுமணி உள்பட அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதா வருகிற 15–ந் தேதி கோவை வருகிறார். கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் அவர் கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையொட்டி வ.உ.சி. மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கு இன்று கால்கோள் விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எஸ்.பி.வேலுமணி மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு கருதி வ.உ.சி. மைதானம் இப்போதே போலீசின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
கடந்த 11–ந் தேதி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மீனவர்கள் 21 பேரையும், அவர்களுடைய விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிட...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
சென்னை, செப்.13- சென்னையில் இன்று ரேஷன் அட்டை தொடர்பான குறைபாடுகளை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...

0 comments:
Post a Comment