Thursday, September 11, 2014
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் குடியிருப்போர் நலச்சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குனியமுத்தூர் குடியிருப்பு நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் நாகரத்தினம், இளங்கோ, கிருஷ்ணன், ரஹமத்துல்லா, பொருளாளர் ரகுமான், கவுரவ ஆலோசகர் மயில்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சையது ஈசாக் வரவேற்புற்றார். ஆலோசனை கூட்டத்தில் குறிஞ்சி நகர், வசந்தம் நகர், லவ்லி கார்டன், பாரதி நகர், அம்மன் கோவில் பிரதான சாலை, பிருந்தாவன் சர்க்கிள் வடக்கு பகுதி மற்றும் தெற்கு பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த அனைத்து தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் குனியமுத்தூர் பகுதியிலுள்ள 87–வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் சாலை வசதிகள், சாக்கடை கால்வாய் வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.
எனவே வருகிற கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். எனவே அனைவரும் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் நடராஜ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை...

0 comments:
Post a Comment