Thursday, September 11, 2014
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் குடியிருப்போர் நலச்சங்க அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு குனியமுத்தூர் குடியிருப்பு நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் சிவசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் நாகரத்தினம், இளங்கோ, கிருஷ்ணன், ரஹமத்துல்லா, பொருளாளர் ரகுமான், கவுரவ ஆலோசகர் மயில்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சையது ஈசாக் வரவேற்புற்றார். ஆலோசனை கூட்டத்தில் குறிஞ்சி நகர், வசந்தம் நகர், லவ்லி கார்டன், பாரதி நகர், அம்மன் கோவில் பிரதான சாலை, பிருந்தாவன் சர்க்கிள் வடக்கு பகுதி மற்றும் தெற்கு பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த அனைத்து தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் குனியமுத்தூர் பகுதியிலுள்ள 87–வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் சாலை வசதிகள், சாக்கடை கால்வாய் வசதிகள், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.
எனவே வருகிற கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமாரை ஆதரித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும். எனவே அனைவரும் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் நடராஜ் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment