Wednesday, September 17, 2014
தேனி மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு விசாரணை முகாமில் ஒரே நாளில் 323 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
சிறப்பு விசாரணை முகாம்
தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலு வையில் இருக்கும் மனுக்களை சிறப்பு முகாம்கள் நடத்தி தீர்வு காண மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார். அவருடைய உத்தர வின் பேரில் தேனி, போடி, சின்னமனூர், உத்தம பாளை யம், ஆண்டிப்பட்டி, கட மலைக்குண்டு, பெரியகுளம் ஆகிய 7 இடங்களில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடத்தப்பட்டது.
இந்த முகாமிற்கு அந்தந்த பகுதி போலீஸ் துணை சூப்பி ரண்டுகள் தலைமை தாங்கி னர். தேனியில் நடந்த முகாமில் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் முத்துக்குமார், வெங்கடாசல பதி, சப்-இன்ஸ்பெக்டர் உதய குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையம் வாரியாக தனித்தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டன. இதில் 130 மனுக்கள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, 115 மனுக்கள் தீர்வு காணப்பட்டன.
323 மனுக்கள் தீர்வு
அதேபோன்று போடி, சின்னமனூர் பகுதிகளில் 79 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 54 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. உத்தம பாளையத்தில் 87 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, 67 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. ஆண்டிப்பட்டி, கடமலைக் குண்டு ஆகிய இடங்களில் 85 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 58 மனுக்களும், பெரியகுளத்தில் 52 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு 29 மனுக்களும் தீர்வு காணப்பட்டன. மாவட் டம் முழுவதும் மொத்தம் 533 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 323 மனுக்கள் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது.
இந்த முகாம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறுகையில், ‘பொது மக்களுக்கு காலதாமதம் இல் லாமல், நேரம் மற்றும் அலைச் சலை குறைக்கவும், விரைவில் நீதி கிடைக்கவும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை குறைக்கவும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேனி மாவட்டத் தில் இதுபோன்ற சிறப்பு முகாம் கள் நடத்தப்படும்’ என்றார்.
சிறப்பு விசாரணை முகாம்
தேனி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலு வையில் இருக்கும் மனுக்களை சிறப்பு முகாம்கள் நடத்தி தீர்வு காண மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார். அவருடைய உத்தர வின் பேரில் தேனி, போடி, சின்னமனூர், உத்தம பாளை யம், ஆண்டிப்பட்டி, கட மலைக்குண்டு, பெரியகுளம் ஆகிய 7 இடங்களில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடத்தப்பட்டது.
இந்த முகாமிற்கு அந்தந்த பகுதி போலீஸ் துணை சூப்பி ரண்டுகள் தலைமை தாங்கி னர். தேனியில் நடந்த முகாமில் போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் முத்துக்குமார், வெங்கடாசல பதி, சப்-இன்ஸ்பெக்டர் உதய குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையம் வாரியாக தனித்தனி குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டன. இதில் 130 மனுக்கள் விசா ரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு, 115 மனுக்கள் தீர்வு காணப்பட்டன.
323 மனுக்கள் தீர்வு
அதேபோன்று போடி, சின்னமனூர் பகுதிகளில் 79 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 54 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. உத்தம பாளையத்தில் 87 மனுக்கள் மீது விசாரணை நடத்தி, 67 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. ஆண்டிப்பட்டி, கடமலைக் குண்டு ஆகிய இடங்களில் 85 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 58 மனுக்களும், பெரியகுளத்தில் 52 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு 29 மனுக்களும் தீர்வு காணப்பட்டன. மாவட் டம் முழுவதும் மொத்தம் 533 மனுக்கள் விசாரணை நடத்தப் பட்டது. அதில் 323 மனுக்கள் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது.
இந்த முகாம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் கூறுகையில், ‘பொது மக்களுக்கு காலதாமதம் இல் லாமல், நேரம் மற்றும் அலைச் சலை குறைக்கவும், விரைவில் நீதி கிடைக்கவும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை குறைக்கவும் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேனி மாவட்டத் தில் இதுபோன்ற சிறப்பு முகாம் கள் நடத்தப்படும்’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளுக்கு, குடிநீர், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்கள் ரூ. 1,...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
செலவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தொழில் நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் க...
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
மதுரை கோ.புதூர் புனித லூர்தன்னை திருத்தலத் திருவிழா, வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், அர்ப்பண வாழ்வு கடவுள்பால் ஈர்ப்...
-
மதுரை அருகே உள்ள பொட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் உதவியாளராக வ...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
0 comments:
Post a Comment