Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
தேனி மாவட்டத்தில், சட்டவிரோதமாக திராவகம் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

திராவகம் விற்பனை

கல்லூரி மாணவிகள் மீது திராவகம் (ஆசிட்) வீசப்படும் சம்பவம் எதிர்பாராத வகை யில் நடந்து வருகிறது. இத னால் திராவகம் விற்பனை செய்ய ஏற்கனவே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 2 கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் திராவகம் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்ப வத்தின் எதிரொலியாக சட்ட விரோதமாக திராவகம் விற் பனை செய்வதை தடுக்கும் வகையில் தேனி மாவட்டத்தில் திராவகம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் ரசாயன பொருட்கள் விற்பனை செய் யும் கடைகளில் சோதனை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தர விட்டார்.

அதன்படி போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வை யில் அந்தந்த உட்கோட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர சோதனை நடத்தினர். மாவட்டம் முழு வதும் போலீசார் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கடைகளில் சோதனை

தேனியில் போலீஸ் இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் தலை மையில், சப்-இன்ஸ் பெக்டர் ரேகா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ரசாயன பொருட்கள் விற்பனை செய் யும் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கடைகளில் திராவகம் விற் பனைக்கு வைக்கப்பட்டு உள்ளதா? என்றும், திராவகம் விற்பனை செய்யும் கடைகளில் அதற்கான உரிமம் பெற்றுள் ளனரா? என்றும் சோதனை நடத்தப்பட்டது. ரசாயனம் வைக்கப்பட்டு உள்ள குடோன் களுக்கு சென்றும் போலீசார் சோதனை செய்தனர்.

திராவகம் விற்பனை செய் யும் உரிமம் பெற்ற சில்லறை கடைகளில் அதன் உரிமையா ளர் யாருக்கு, எவ்வளவு திராவ கம் விற்பனை செய்கிறார் என்ற விவரம் அடங்கிய விவர பதி வேட்டை பராமரிக்க வேண் டும். 18 வயதுக்கு குறைவான வர்களுக்கு திராவகம் விற்பனை செய்யக்கூடாது. உரிமம் பெறாமல் சட்ட விரோ தமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோதனையின் போது போலீசார் அறிவுறுத்தினர்.

0 comments: