Monday, September 08, 2014
மதுரை புத்தகத் திருவிழாவில் ரூ. 3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி இருப்பதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) சார்பில், மதுரையில் 9ஆவது புத்தகத் திருவிழா, கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நிறைவு நாள் என்பதால், புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.
இதில், ரூ. 3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியிருப்பதாக, பபாசியின் தலைவர் மெ. மீனாட்சி சோமசுந்தரம், செயலர் கே.எஸ். புகழேந்தி ஆகியோர் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூட்டாகக் தெரிவித்தது: புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மதுரை மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து புத்தகங்களைப் பார்வையிட்டு, வாங்கிச் சென்றனர். 150 பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வந்து பார்வையிட்டனர்.
அவர்களில் 10 சதவீதம் பேர் புத்தகங்களை வாங்கினர். புத்தகக் காட்சியை மொத்தம் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கிச் சென்ற வகையில், ரூ. 3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 2 கோடிக்கு புத்தகம் விற்பனையாகியிருந்தது. வாசிப்போர் எண்ணிக்கை மேலும் உயர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு உதவியாக இருந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்துக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (பபாசி) சார்பில், மதுரையில் 9ஆவது புத்தகத் திருவிழா, கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நிறைவு நாள் என்பதால், புத்தகக் கண்காட்சிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.
இதில், ரூ. 3 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியிருப்பதாக, பபாசியின் தலைவர் மெ. மீனாட்சி சோமசுந்தரம், செயலர் கே.எஸ். புகழேந்தி ஆகியோர் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூட்டாகக் தெரிவித்தது: புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மதுரை மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து புத்தகங்களைப் பார்வையிட்டு, வாங்கிச் சென்றனர். 150 பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வந்து பார்வையிட்டனர்.
அவர்களில் 10 சதவீதம் பேர் புத்தகங்களை வாங்கினர். புத்தகக் காட்சியை மொத்தம் 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு வகையான புத்தகங்களை வாங்கிச் சென்ற வகையில், ரூ. 3 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 2 கோடிக்கு புத்தகம் விற்பனையாகியிருந்தது. வாசிப்போர் எண்ணிக்கை மேலும் உயர்ந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு உதவியாக இருந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்துக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment