Wednesday, September 10, 2014
காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்தவர். இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இரண்டு இந்தி படங்களிலும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘நண்பேன்டா’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். இதற்காக காஜல் அகர்வாலுக்கு 40 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத காரணங்களால் காஜல் அகர்வால் இப்படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்தனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
நண்பேன்டா படத்தில் காஜல் அகர்வால் நடிக்காததால் அட்வான்ஸாக கொடுத்த ரூ.40 லட்சத்தை உதயநிதி திருப்பி கேட்டார். ஆனால் அதை கொடுக்க காஜல் அகர்வால் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. உங்களுடன் அடுத்த படத்தில் நடிக்கும் போது அட்வான்ஸ் தொகையை கழித்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம். பல தடவை வற்புறுத்தி கேட்டும் பணத்தை அவர் கொடுக்க வில்லை.
இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் காஜல் அகர்வால் மீது உதயநிதி புகார் அளித்துள்ளார். அட்வான்ஸ் தொகை ரூ.40 லட்சத்தை வாங்கி தரும்படி புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். தயாரிப்பாளர் சங்கம் விரைவில் இது குறித்து விசாரணை நடத்த உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...

0 comments:
Post a Comment