Friday, September 05, 2014
சிவகங்கையை சேர்ந்தவர் சுதா (வயது 38). இவரும் அரசனூர் கிராமத்தை சேர்ந்த குணவதி என்பவரும் ஒரு தனியார் பஸ்சில் சிவகங்கை வந்தனர். அப்போது, சுதாவின் கால் குணவதி மீது தெரியாமல் பட்டுவிட்டது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுப்பற்றி குணவதி செல்போன் மூலம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் பஸ் திருமாஞ்சோலை பஸ் நிறுத்தம் வந்தது. அப்போது அங்கு தயாராக நின்று இருந்த குணவதியின் தந்தை துரைச்சாமி, தாயார் பேச்சியம்மாள், பெரியப்பா வெள்ளைச்சாமி ஆகியார் சுதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார்களாம். இதுகுறித்து சுதா பூவந்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம், தாக்குதலில் ஈடுபட்ட குணவதி, அவரது தந்தை உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...

0 comments:
Post a Comment