Friday, September 05, 2014

On Friday, September 05, 2014 by farook press in ,    
சிவகங்கையை சேர்ந்தவர் சுதா (வயது 38). இவரும் அரசனூர் கிராமத்தை சேர்ந்த குணவதி என்பவரும் ஒரு தனியார் பஸ்சில் சிவகங்கை வந்தனர். அப்போது, சுதாவின் கால் குணவதி மீது தெரியாமல் பட்டுவிட்டது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுப்பற்றி குணவதி செல்போன் மூலம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் பஸ் திருமாஞ்சோலை பஸ் நிறுத்தம் வந்தது. அப்போது அங்கு தயாராக நின்று இருந்த குணவதியின் தந்தை துரைச்சாமி, தாயார் பேச்சியம்மாள், பெரியப்பா வெள்ளைச்சாமி ஆகியார் சுதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார்களாம். இதுகுறித்து சுதா பூவந்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் மலைச்செல்வம், தாக்குதலில் ஈடுபட்ட குணவதி, அவரது தந்தை உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

0 comments: