Wednesday, September 10, 2014
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.5 கோடி நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், மிகப்பெரிய பொருட்சேதமும், ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ராணுவம் மீட்டுள்ளது. வரலாறு காணாத பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெள்ளத்தில் சிதைந்து போன பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய சவாலை ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு தமிழக அரசும், தமிழக மக்களும் ஆதரவாக இருப்பார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.5 கோடி நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளதுடன், ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி 9.9.16 திருச்சி கர்நாடகா அரசை கண்டித்தும் தண்ணீர் பிரச்சனையை வழியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment