Wednesday, September 10, 2014
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.5 கோடி நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், மிகப்பெரிய பொருட்சேதமும், ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ராணுவம் மீட்டுள்ளது. வரலாறு காணாத பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெள்ளத்தில் சிதைந்து போன பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய சவாலை ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு தமிழக அரசும், தமிழக மக்களும் ஆதரவாக இருப்பார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.5 கோடி நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளதுடன், ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
- 
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
- 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
- 
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
- 
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
- 
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
- 
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
 

 
 
 
0 comments:
Post a Comment