Wednesday, September 10, 2014
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு, தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.5 கோடி நிதி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், மிகப்பெரிய பொருட்சேதமும், ஏராளமான உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ராணுவம் மீட்டுள்ளது. வரலாறு காணாத பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெள்ளத்தில் சிதைந்து போன பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் மிகப்பெரிய சவாலை ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மிகுந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு தமிழக அரசும், தமிழக மக்களும் ஆதரவாக இருப்பார்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.5 கோடி நிதியுதவி வழங்க ஆணையிட்டுள்ளதுடன், ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment