Wednesday, September 10, 2014

கோவை அவிநாசி ரோடு பீளமேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்றிரவு திருமண விழா நடந்தது. இதில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த, தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் தீபக் (30), அவர் மனைவி ஜமுனா தேவி (25) மற்றும் உறவினர்கள் காரில் சென்றனர். விழா முடிந்து இரவு 9 மணிக்கு, தீபக், ஜமுனா தேவி, அவர்களது உறவினர்கள் ரேஸ்கோர்சுக்கு காரில் புறப்பட்டனர்.
அப்போது திருமண மண்டபம் முன் நின்ற வாலிபர், கையில் ஒரு பேப்பரை ஜமுனா தேவியிடம் காட்டி முகவரி கேட்டார். ஜமுனா தேவி பேப்பரை வாங்கி பார்த்த போது, அந்த நபர் அவரின் கழுத்தில் இருந்த 18 பவுன் தங்க நெக்லஸ், ஆரத்தை கொத்தாக பறித்தார். உறவினர்கள், நகையை மீட்க முயன்றபோது அந்த வாலிபர் தப்பி ரோட்டிற்கு மறு புறம் ஓடினார். இந்நிலையில் தீபக், ‘‘திருடன் தப்பி ஓடுறான், விடாதீங்க, ’ என கூச்சலிட்டார். தீபக் அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது, அவர் ரோட்டோரத்தில் நின்ற தனது கூட்டாளியுடன் பைக்கில் ஏறினார். அக்கம் பக்கத்தினர், நகை பறித்த வாலிபர் மற்றும் அவரது கூட்டாளியை மடக்க முயன்றனர். தீபக் பைக்கை இழுத்து பிடித்தார். இந்நிலையில், பைக்கில் இருந்த நகை திருடர்கள், தங்களது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து தீபக் மற்றும் பொதுமக்களை மிரட்டினர். ‘‘யாராவது பக்கத்தில் வந்தால் குத்தி கொன்று விடுவோம், பைக்கில் நாங்கள் போகும் வரை யாரும் பின்னால் வரக்கூடாது, மீறினால் விபரீதம் ஏற்படும், ’’என எச்சரித்தனர்.
அவ்வழியாக சென்றவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தியதால், நகை திருடர்களால் பைக்கில் தப்ப முடியவில்லை. பைக்கை அப்படியே விட்டு, குறுக்கு சந்தில் புகுந்து ஓடினர். பொதுமக்கள் சிலர் அவர்களை சிறிது தூரம் விரட்டியும் பிடிக்க முடியவில்லை. இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்திற்கு வரும் பெண்களை நோட்டம் விட்டு சினிமா பட பாணியில் கத்தி காட்டி மிரட்டி நகை பறித்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பறிபோன நகைகளின் மதிப்பு சுமார் 3.2 லட்ச ரூபாய்.
போலீசார் கூறுகையில், ‘‘ பைக் ஆவணங்களை வைத்து நகை பறித்தவர்களின் விவரங்களை விசாரிக்கிறோம். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம், ’’ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
0 comments:
Post a Comment