Wednesday, September 10, 2014
கோவை, : கோவையில் காரில் சென்ற இளம்பெண்ணிடம் 18 பவுன் நகை பறித்த கும்பல்,
கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை அவிநாசி ரோடு பீளமேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்றிரவு திருமண விழா நடந்தது. இதில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த, தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் தீபக் (30), அவர் மனைவி ஜமுனா தேவி (25) மற்றும் உறவினர்கள் காரில் சென்றனர். விழா முடிந்து இரவு 9 மணிக்கு, தீபக், ஜமுனா தேவி, அவர்களது உறவினர்கள் ரேஸ்கோர்சுக்கு காரில் புறப்பட்டனர்.
அப்போது திருமண மண்டபம் முன் நின்ற வாலிபர், கையில் ஒரு பேப்பரை ஜமுனா தேவியிடம் காட்டி முகவரி கேட்டார். ஜமுனா தேவி பேப்பரை வாங்கி பார்த்த போது, அந்த நபர் அவரின் கழுத்தில் இருந்த 18 பவுன் தங்க நெக்லஸ், ஆரத்தை கொத்தாக பறித்தார். உறவினர்கள், நகையை மீட்க முயன்றபோது அந்த வாலிபர் தப்பி ரோட்டிற்கு மறு புறம் ஓடினார். இந்நிலையில் தீபக், ‘‘திருடன் தப்பி ஓடுறான், விடாதீங்க, ’ என கூச்சலிட்டார். தீபக் அந்த வாலிபரை பிடிக்க முயன்றபோது, அவர் ரோட்டோரத்தில் நின்ற தனது கூட்டாளியுடன் பைக்கில் ஏறினார். அக்கம் பக்கத்தினர், நகை பறித்த வாலிபர் மற்றும் அவரது கூட்டாளியை மடக்க முயன்றனர். தீபக் பைக்கை இழுத்து பிடித்தார். இந்நிலையில், பைக்கில் இருந்த நகை திருடர்கள், தங்களது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து தீபக் மற்றும் பொதுமக்களை மிரட்டினர். ‘‘யாராவது பக்கத்தில் வந்தால் குத்தி கொன்று விடுவோம், பைக்கில் நாங்கள் போகும் வரை யாரும் பின்னால் வரக்கூடாது, மீறினால் விபரீதம் ஏற்படும், ’’என எச்சரித்தனர்.
அவ்வழியாக சென்றவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தியதால், நகை திருடர்களால் பைக்கில் தப்ப முடியவில்லை. பைக்கை அப்படியே விட்டு, குறுக்கு சந்தில் புகுந்து ஓடினர். பொதுமக்கள் சிலர் அவர்களை சிறிது தூரம் விரட்டியும் பிடிக்க முடியவில்லை. இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்திற்கு வரும் பெண்களை நோட்டம் விட்டு சினிமா பட பாணியில் கத்தி காட்டி மிரட்டி நகை பறித்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பறிபோன நகைகளின் மதிப்பு சுமார் 3.2 லட்ச ரூபாய்.
போலீசார் கூறுகையில், ‘‘ பைக் ஆவணங்களை வைத்து நகை பறித்தவர்களின் விவரங்களை விசாரிக்கிறோம். விரைவில் அவர்களை பிடித்து விடுவோம், ’’ என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment