Wednesday, September 10, 2014
அமெரிக்க நாட்டில் 5 குழந்தைகளை தனது தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிகளுக்கு 5
குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக
இவர்கள் விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில் குழந்தைகளின் தாய், தனது குழந்தைகளை தொடர்பு கொள்ள
முடியவில்லை என காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின்
அடிப்படையில் குழந்தைகள் வளர்ந்து வந்த வீட்டை காவல் துறையினர் சோதனை
செய்யத் திட்டமிட்டனர்.
அவ்வீட்டை சோதனை செய்ய சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது.
குழந்தைகளின் தந்தையையும் காணவில்லை. இதனால் காவல் துறையினருக்கு தந்தை
மீது சந்தேகம் எழுந்தது.
உடனே இதுதொடர்பாக அமெரிக்காவிலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல்
தரப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளின் தந்தையை மிஸிஸிப்பி பகுதியில்,
காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.
இதுதொடர்பாக குழந்தைகளின் தந்தையிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அலாபமா அருகேயுள்ள ஒரு வனப்பகுதியில் தனது 5 குழந்தைகளை கொன்று
புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின் காவல் துறையினர், புதைக்கப்பட்ட 5 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment