Wednesday, September 10, 2014
அமெரிக்க நாட்டில் 5 குழந்தைகளை தனது தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிகளுக்கு 5
குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக
இவர்கள் விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில் குழந்தைகளின் தாய், தனது குழந்தைகளை தொடர்பு கொள்ள
முடியவில்லை என காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின்
அடிப்படையில் குழந்தைகள் வளர்ந்து வந்த வீட்டை காவல் துறையினர் சோதனை
செய்யத் திட்டமிட்டனர்.
அவ்வீட்டை சோதனை செய்ய சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது.
குழந்தைகளின் தந்தையையும் காணவில்லை. இதனால் காவல் துறையினருக்கு தந்தை
மீது சந்தேகம் எழுந்தது.
உடனே இதுதொடர்பாக அமெரிக்காவிலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல்
தரப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளின் தந்தையை மிஸிஸிப்பி பகுதியில்,
காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.
இதுதொடர்பாக குழந்தைகளின் தந்தையிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அலாபமா அருகேயுள்ள ஒரு வனப்பகுதியில் தனது 5 குழந்தைகளை கொன்று
புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின் காவல் துறையினர், புதைக்கப்பட்ட 5 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
0 comments:
Post a Comment