Wednesday, September 10, 2014
அமெரிக்க நாட்டில் 5 குழந்தைகளை தனது தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிகளுக்கு 5
குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக
இவர்கள் விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில் குழந்தைகளின் தாய், தனது குழந்தைகளை தொடர்பு கொள்ள
முடியவில்லை என காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின்
அடிப்படையில் குழந்தைகள் வளர்ந்து வந்த வீட்டை காவல் துறையினர் சோதனை
செய்யத் திட்டமிட்டனர்.
அவ்வீட்டை சோதனை செய்ய சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது.
குழந்தைகளின் தந்தையையும் காணவில்லை. இதனால் காவல் துறையினருக்கு தந்தை
மீது சந்தேகம் எழுந்தது.
உடனே இதுதொடர்பாக அமெரிக்காவிலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல்
தரப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளின் தந்தையை மிஸிஸிப்பி பகுதியில்,
காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.
இதுதொடர்பாக குழந்தைகளின் தந்தையிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அலாபமா அருகேயுள்ள ஒரு வனப்பகுதியில் தனது 5 குழந்தைகளை கொன்று
புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின் காவல் துறையினர், புதைக்கப்பட்ட 5 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment