Wednesday, September 10, 2014
அமெரிக்க நாட்டில் 5 குழந்தைகளை தனது தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிகளுக்கு 5
குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக
இவர்கள் விவகாரத்து பெற்றனர்.
இந்நிலையில் குழந்தைகளின் தாய், தனது குழந்தைகளை தொடர்பு கொள்ள
முடியவில்லை என காவல் துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின்
அடிப்படையில் குழந்தைகள் வளர்ந்து வந்த வீட்டை காவல் துறையினர் சோதனை
செய்யத் திட்டமிட்டனர்.
அவ்வீட்டை சோதனை செய்ய சென்ற போது, வீடு பூட்டப்பட்டிருந்தது.
குழந்தைகளின் தந்தையையும் காணவில்லை. இதனால் காவல் துறையினருக்கு தந்தை
மீது சந்தேகம் எழுந்தது.
உடனே இதுதொடர்பாக அமெரிக்காவிலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல்
தரப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளின் தந்தையை மிஸிஸிப்பி பகுதியில்,
காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.
இதுதொடர்பாக குழந்தைகளின் தந்தையிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அலாபமா அருகேயுள்ள ஒரு வனப்பகுதியில் தனது 5 குழந்தைகளை கொன்று
புதைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின் காவல் துறையினர், புதைக்கப்பட்ட 5 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment