Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    
கூடலூர் அருகே அரசு பஸ்களை காட்டு யானை கள் வழிமறித்ததால் பய ணிகள் பீதி அடைந்த னர். பின்னர் 1½ மணி நேரத்துக்கு பிறகு காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.

காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானைகள் செல்லும் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு மின்வேலிகள், கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், வனப்பகுதியில் விலங்குகளுக்கு உணவு தட்டுப் பாடு நிலவுவதால் குடியிருப்பு கள், விவசாய நிலங்களை நோக்கி காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன.இதனால் பொருட்சேதமும், உயிரிழப்பு சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வரு கின்றன.

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட கிளன் வன்ஸ் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக குட்டியுடன் கூடிய 3 காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. இதனால் பொதுமக்கள், தோட்ட தொழி லாளர்கள் மத்தியில் பீதி நிலவி வந்தது.

அரசு பஸ்களை வழிமறித்தது

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8¼ மணிக்கு கூட லூரில் இருந்து பெரியசோலை, மூலக்காடு பகுதிக்கு பயணிக ளுடன் அரசு பஸ்கள் புறப் பட்டு சென்றது. அப்போது கிளன்வன்ஸ் பகுதியில் செல் லும் சாலையில் குட்டியுடன் 3 காட்டு யானைகள் நின்றன. மேலும் அரசு பஸ்களை வழி மறித்தது. இதனால் பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள், போக்குவரத்து கழக ஊழியர் கள் மத்தியில் பீதி ஏற்பட் டது.

இதையடுத்து, பஸ் டிரைவர் கள் தங்கள் பஸ்சில் இருந்த ஓலிப்பான்களை அடித்தனர். ஆனால் காட்டு யானைகள் அதை பொருட்படுத்தாமல் பஸ்களை நோக்கி வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர்கள அரசு பஸ்களை சற்று தூரம் பின்னோக்கி ஓட்டி சென்றனர்.இதனை தொடர்ந்து சுமார் 1½ மணி நேரம் கழித்து அருகே இருந்த தோட்டத்துக் குள் காட்டு யானைகள் புகுந் தன. அதன்பிறகு அரசு பஸ்கள் அங்கிருந்து புறப்பட்டு சென் றது. இது குறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறை யினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் நேற்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானை களை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 comments: