Friday, September 05, 2014
அரியலூர் வாலாஜா நகரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களுக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் கலவை சாதம் வழங்கினார்.
கலவை சாதம்
அரியலூர் மாவட்டம், அரியலூர் வாலாஜாநகரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பலவகை கலவை சாதம் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அரியலூர் வட்டாரத்தில் 125 அங்கன்வாடி மையங் களிலும் உள்ள 2825 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கு பலவகை கலவை சாதம் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் வழங்கப்பட உள்ளது.
8–ந் தேதி
8–ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் உள்ள 122 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 842 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் மற்றும் செந்துறை வட்டா ரத்தில் உள்ள 127 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 390 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்பட உள்ளது.15–ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் உள்ள 125 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 835 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் மற்றும் தா.பழூர் வட்டாரத்தில் உள்ள 120 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 213 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்பட உள்ளது.
15 ஆயிரம் குழந்தைகள்
தமிழக முதலமைச்சர் அறிவித்தப்படி, 15–ந் தேதிமுதல் அரியலூர் மாவட் டத்தில் மொத்தம் உள்ள 774 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள 15 ஆயிரத்து 817 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மினி ஜான்பால், வட்டார குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவலர் க.அன்பரசி, மாவட்ட புள்ளி யியல் ஆய் வாளர் பாலசுப்ர மணியன், திருமானூர் குழந் தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் எம்.சி.அருணா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment