Friday, September 05, 2014
அரியலூர் வாலாஜா நகரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களுக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் கலவை சாதம் வழங்கினார்.
கலவை சாதம்
அரியலூர் மாவட்டம், அரியலூர் வாலாஜாநகரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பலவகை கலவை சாதம் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அரியலூர் வட்டாரத்தில் 125 அங்கன்வாடி மையங் களிலும் உள்ள 2825 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கு பலவகை கலவை சாதம் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் வழங்கப்பட உள்ளது.
8–ந் தேதி
8–ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் உள்ள 122 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 842 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் மற்றும் செந்துறை வட்டா ரத்தில் உள்ள 127 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 390 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்பட உள்ளது.15–ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் உள்ள 125 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 835 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் மற்றும் தா.பழூர் வட்டாரத்தில் உள்ள 120 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 213 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்பட உள்ளது.
15 ஆயிரம் குழந்தைகள்
தமிழக முதலமைச்சர் அறிவித்தப்படி, 15–ந் தேதிமுதல் அரியலூர் மாவட் டத்தில் மொத்தம் உள்ள 774 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள 15 ஆயிரத்து 817 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மினி ஜான்பால், வட்டார குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவலர் க.அன்பரசி, மாவட்ட புள்ளி யியல் ஆய் வாளர் பாலசுப்ர மணியன், திருமானூர் குழந் தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் எம்.சி.அருணா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment