Friday, September 05, 2014
அரியலூர் வாலாஜா நகரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களுக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் கலவை சாதம் வழங்கினார்.
கலவை சாதம்
அரியலூர் மாவட்டம், அரியலூர் வாலாஜாநகரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பலவகை கலவை சாதம் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அரியலூர் வட்டாரத்தில் 125 அங்கன்வாடி மையங் களிலும் உள்ள 2825 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கு பலவகை கலவை சாதம் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் வழங்கப்பட உள்ளது.
8–ந் தேதி
8–ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் உள்ள 122 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 842 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் மற்றும் செந்துறை வட்டா ரத்தில் உள்ள 127 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 390 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்பட உள்ளது.15–ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் உள்ள 125 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 835 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் மற்றும் தா.பழூர் வட்டாரத்தில் உள்ள 120 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 213 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்பட உள்ளது.
15 ஆயிரம் குழந்தைகள்
தமிழக முதலமைச்சர் அறிவித்தப்படி, 15–ந் தேதிமுதல் அரியலூர் மாவட் டத்தில் மொத்தம் உள்ள 774 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள 15 ஆயிரத்து 817 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மினி ஜான்பால், வட்டார குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவலர் க.அன்பரசி, மாவட்ட புள்ளி யியல் ஆய் வாளர் பாலசுப்ர மணியன், திருமானூர் குழந் தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் எம்.சி.அருணா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
வாஷிங்டன், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமவை சந்தித்தார். வெள்ளை மாளிகையில்,...
-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் வனப்ப...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
-
'ஐ' பட இசை வெளியீடு பற்றித்தான் தற்போது தென்னிந்தியத் திரையுலகமே பேசிக் கொண்டிருக்கிறது. எப்படியாவது விழாவில் கலந்து கொள்ள வேண்...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment