Friday, September 05, 2014
அரியலூர் வாலாஜா நகரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தை களுக்கு கலெக்டர் சரவணவேல்ராஜ் கலவை சாதம் வழங்கினார்.
கலவை சாதம்
அரியலூர் மாவட்டம், அரியலூர் வாலாஜாநகரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கலவை சாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பலவகை கலவை சாதம் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
அரியலூர் வட்டாரத்தில் 125 அங்கன்வாடி மையங் களிலும் உள்ள 2825 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கு பலவகை கலவை சாதம் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் வழங்கப்பட உள்ளது.
8–ந் தேதி
8–ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில் உள்ள 122 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 842 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் மற்றும் செந்துறை வட்டா ரத்தில் உள்ள 127 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 390 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்பட உள்ளது.15–ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் உள்ள 125 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 835 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் மற்றும் தா.பழூர் வட்டாரத்தில் உள்ள 120 அங்கன்வாடி மையங்களில் உள்ள 2 ஆயிரத்து 213 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்பட உள்ளது.
15 ஆயிரம் குழந்தைகள்
தமிழக முதலமைச்சர் அறிவித்தப்படி, 15–ந் தேதிமுதல் அரியலூர் மாவட் டத்தில் மொத்தம் உள்ள 774 அங்கன்வாடி மையங்களிலும் உள்ள 15 ஆயிரத்து 817 (2–5 வயதுவரை) குழந்தைகளுக்கும் பலவகை கலவை சாதம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மினி ஜான்பால், வட்டார குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவலர் க.அன்பரசி, மாவட்ட புள்ளி யியல் ஆய் வாளர் பாலசுப்ர மணியன், திருமானூர் குழந் தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் எம்.சி.அருணா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து பிரியும் பெருவளை வாய்க்காலில் பாலம் பகுதியிலிருந்து ஒருபக்க கைப்புறச்சுவர் இடிந...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
ஐகோர்ட்டில், ‘டைம்ஸ் ஆப் இந்தியா‘ பத்திரிகை சென்னை பதிப்பு ஆசிரியர் சுனில் நாயர், வெளியீட்டாளர் சந்தானகோபால் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவ...
0 comments:
Post a Comment