Thursday, September 11, 2014
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்க சென்றார்.
அப்போது அதேபகுதியை சேர்ந்த 32 வயது வாலிபர் ஒருவர் அந்த பெண் மீது பாய்ந்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த பெண் தனது மகன்களிடம் கூறி அழுதார். அவர்கள் தாயை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே வாலிபர் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதான பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, போலீசார் அந்த வாலிபரை தேடிச் சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணிடம் இன்று காலை நித்திரவிளை போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண், போலீசாரிடம் அளித்த புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த சேவியர் (வயது 32) என்ற வாலிபர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சேவியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான சேவியரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
கோவை மாநகராட்சி 87–து வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் குனியமுத்தூர் வசந்தம் நகர் ...
-
நபார்டு வங்கியின் கடன் இலக்கு... ரூ.2,745 கோடி = கரூர் மாவட்ட கலெக்டர் த கவல் ...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி 17.4.16 திமுக கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற வேட்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கூட்டம்திருச்சி சத்த் p ரம் பேரு...
-
திருச்சி-24.03.19 தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி...
-
மடத்துக்குளம் பஸ்நிலைய வளாக பகுதியில் கற்கள் பதித்து தரைத்தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது.இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை ஒட்டி மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.வ...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
கோவை, செப்.13– தமிழக பா.ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் க...
-
திருப்பூர் : மாவட்டத்தில், உள்ளாட்சி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள பள்ளிகளுக்கு, இன்றும் நாளையும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்...
0 comments:
Post a Comment