Monday, September 01, 2014

கோவை,: கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தவர் கற்பகம். இவர் நேற்று பணியிடம் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் அண்ணாமலை பல்கலைகழக வருவாய் அலுவலராக பணியாற்றிய கிறிஸ்து ராஜ் மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பதவியேற்றார். சென்னையை சேர்ந்த இவர் கடந்த 2005ம் ஆண்டில் குரூப்1 தேர்வில் வெற்றி பெற்றார். நாகப்பட்டணத்தில் ஆர்.டீ.ஓ ஆகவும், கரூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற கிறிஸ்து ராஜூக்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வாழ்த்து தெரிவித்தார். புதிய மாவட்ட வருவாய் அலுவலரை கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தாசில்தார்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கிறிஸ்து ராஜ் கூறுகையில், ‘‘ அரசின் நல திட்டங்கள் ஏழை மக்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சியில் எனது பங்களிப்பு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிலங்களை பெற்று தந்து பணிகளை விரைவுபடுத்துவேன்,’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
0 comments:
Post a Comment