Monday, September 01, 2014
தண்டையார்பேட்டை, : மனைவியை பற்றி ஆபாசமாக பேசியதால் தலையில் கல்லைப்போட்டு சமையல்காரரை கொலை செய்தேன் என்று பிடிபட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் குமார் (40). சமையல்காரர். இவர், கடந்த 6ம் தேதி ராயபுரம் சிங்கார தோட்டம் பகுதியில் தலை யில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ராயபுரம் போலீசார், 200க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். குமாருடன் பணியாற்றிய மாரியப்பன் (30) என்பவரை விசாரணைக்கு அழைத்தபோது அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், தென்காசி அருகே இலஞ்சி என்ற கிராமத்தில் மாரியப்பன் பதுங்கியிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். மாரியப்பனை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாரியப்பன் அளித்த வாக்குமூலத்தில், ‘‘நானும் சமையல் வேலை செய்தேன். குமார் சரியாக சம்பள பணம் கொடுக்க மாட்டார். மேலும் என்னுடைய சம்பளத்தை வாங்கி மது வாங்கி குடித்துவிடுவார். கடந்த 6ம் தேதி இருவரும் மது குடித்தோம். அப்போது என் மனைவி பற்றி குமார் ஆபாசமாக பேசியதால் தகராறு ஏற்பட்டது. இதனால் அவரை தாக்கினேன். தொடர்ந்து என் மனைவியை பற்றி மேலும் ஆபாசமாக பேசினார். இதனால் கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, குமாரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
0 comments:
Post a Comment