Tuesday, September 02, 2014
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18.9.2014 அன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறுகிற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிட்டு தேர்தலைச் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.9.2014 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு ஆகியவற்றுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 22வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 45வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், திருமுருகன் பூண்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலிலும், திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11வது வார்டு (குண்டடம்) தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதெனவும், உடுமலை ஊராட்சி ஒன்றியம் 6வது வார்டு, கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் மற்றும் தளி பேரூராட்சி 5வது வார்டு, பல்லடம் நகராட்சி 6வது வார்டு ஆகியவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இடைதேர்தல் நடைபெறும் மற்ற பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இரு கட்சிகளும் கூடிப்பேசி முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும்.
(M.ரவி) (K.காமராஜ்)
மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர்
இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment