Tuesday, September 02, 2014
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18.9.2014 அன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறுகிற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிட்டு தேர்தலைச் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.9.2014 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு ஆகியவற்றுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 22வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 45வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், திருமுருகன் பூண்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலிலும், திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11வது வார்டு (குண்டடம்) தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதெனவும், உடுமலை ஊராட்சி ஒன்றியம் 6வது வார்டு, கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் மற்றும் தளி பேரூராட்சி 5வது வார்டு, பல்லடம் நகராட்சி 6வது வார்டு ஆகியவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இடைதேர்தல் நடைபெறும் மற்ற பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இரு கட்சிகளும் கூடிப்பேசி முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும்.
(M.ரவி) (K.காமராஜ்)
மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர்
இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி ச...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நாராயணன் பதவி உயர்வு பெற்று சேலம் மாவட்டத்திற்கு மாற்றலாகி சென்றுவிட்...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
02.09.2014 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் கட்டப்பட்டுவரும் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தை மாவட்ட ஆட்சிதலைவர் திர...

0 comments:
Post a Comment