Tuesday, September 02, 2014
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18.9.2014 அன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறுகிற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிட்டு தேர்தலைச் சந்திப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
2.9.2014 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இரண்டு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு ஆகியவற்றுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 22வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், 45வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், திருமுருகன் பூண்டி பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலிலும், திருப்பூர் மாவட்ட ஊராட்சி 11வது வார்டு (குண்டடம்) தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதெனவும், உடுமலை ஊராட்சி ஒன்றியம் 6வது வார்டு, கண்ணமநாயக்கனூர் ஊராட்சித் தலைவர் மற்றும் தளி பேரூராட்சி 5வது வார்டு, பல்லடம் நகராட்சி 6வது வார்டு ஆகியவற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இடைதேர்தல் நடைபெறும் மற்ற பகுதிகளில் போட்டியிடுவது குறித்து இரு கட்சிகளும் கூடிப்பேசி முடிவு செய்து பின்னர் அறிவிக்கப்படும்.
(M.ரவி) (K.காமராஜ்)
மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர்
இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
லாரிகள் சிறைபிடிப்பு அந்தியூர் அருகே உள்ளது கெட்டிசமுத்திரம் ஏரி. இந்த ஏரி 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. தற்போது ஏரியில் த...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருட்டுத்தனமாக மணல் அள்ளிய ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி பறிமுதல். அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் கைது திருச்சி மாவட்டம் மணப்பாறை...
-
புனித ஹஜ் பயணமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் மெக்கா மற்றும் பல்வேறு வெளி நாடுகளில் பிரசித்தி பெற்ற தலங்களுக்கு ...
-
Kathir Avan with ராதா கிருஷ்ணன் முகநூல் செய்தி. ஒரு ரூபாயில் ஒரு உயிர்….. இருபத்தி நான்கு மணி நேர மருத்துவமனையை நீங்கள் பார்த்திருப்பீர்க...

0 comments:
Post a Comment