Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
கோவை,செப்.16-
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கிழக்கு மண்டல பகுதியில் சந்தையில் அமைச்சர் மோகன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைதேர்தல் வருகின்ற 18 ம் தேதி நடைபெற உள்ளது. மேயர் பதவிக்கு அண்ணா தி.மு.க.சார்பில் கணபதி ப.ராஜ்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கோவை மாநகராட்சி யில் உள்ள 100 வார்டுகளிலும் தமிழக அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 57வது வார்டு, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து பகுதியிலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான ப.மோகன் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சிங்கை என்.முத்து, பகுதி செயலாளர் சிங்கை ரங்கநாதன், 57வது வார்டு கவுன்சிலரும், தொகுதி செயலாளருமான மாரப்பன், வட்டார செயலாளர் ஆர்.வடிவேல்,மற்றும் அண்ணா தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களிடமும்  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பின்னர் மசக்காளிபாளையம் ரவுண்டாணா அருகில் சந்தையில் அமைச்சர் மோகன் பெண்களிடம்  3 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அமைச்சருடன் மகளிர் அணி பகுதி இணை செயலாளர் குமுதவல்லி, பேரவை செயலாளர் ராஜேந்திரன், வட்டார அவைத்தலைவர் பன்னீர் செல்வம், பெரியார் ராமசாமி, பார்த்திபன்,சௌந்தரராஜன்,தாஸ், எம்.கே.பி.செல்வராஜ்,சேகர், பழனிசாமி, திண்டிவனம் எம்.எல்.ஏ.ஹரிதாஸ், விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பி.தங்கபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் செல்லமுத்து, வார்டு பொறுப்பாளர்கள் ரஜினி குணசேகரன், முருகானந்தம், குமரேசன், பால்ராஜ், திருநாவுகரசு, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பாக்கியலட்சுமி, கௌரி ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.


0 comments: