Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
சூலூர்.செப்.16-
இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக அண்ணா தி.மு.க.நிர்வாகிகளும்,கூட்டணிக்கட்சி தலைவர்களும் இறுதி கட்ட பிரச்சாரம் செய்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியம், இருகூர் பேரூராட்சி மன்ற இடைத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் டி.பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் சூலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் நிலவள வங்கி சங்க தலைவர் என்.சி.குட்டியப்பன், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் ஏ.சி.மகாலிங்கம், சூலூர் அங்கமுத்து உள்ளிட்ட அண்ணா தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேட்பாளர் பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் தலைமையில் அண்ணா தி.மு.க.கூட்டணி கட்சியான தமிழ் மாநில பார்வர்டு பிளாக் கட்சி பொறுப்பாளர் கதிரவன் எம்.எல்.ஏ., இருகூர் சுங்கம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:​- 


தமிழக முதல்வர் ஜெயலலிதா அடித்தட்டு மக்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்காக நல்ல பல திட்டங்களை அளித்து வருகிறார்.எங்களை போன்ற எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் காலையில் வைக்கும் கோரிக்கைகளை மாலையில் 110 விதியின் கீழ் திட்டங்களாக அறிவித்து வருகிறார். இந்தியாவில் உள்ள 32 மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை கொண்டு செல்லும் வகையில் விஷன் 2023 ஐ உருவாக்கியுள்ளார்.அவரது வாழ்நாளில் தமிழக மக்கள் யாரும் கையேந்தும் நிலைக்கு விடமாட்டேன் என சூளுரைத்து மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தரும் வகையில் அள்ளும் பகலும் அவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார்.அவரது ஆசி பெற்ற வேட்பாளராக போட்டியிடும் பத்மசுந்தரி துரைசாமி நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்.முதல்வரின் திட்டங்களை முன் நின்று செயல்படுத்துபவர்.அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கதிரவன் எம்.எல்.ஏ.பேசினார்.
கூட்டத்தில் வாகரம்பாளையம் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன், இருகூர் துரைசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவி, ரங்கநாதன், கருப்புசாமி, சக்திவேல், பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் மாவட்டசெயலாளர் கர்ணன். அம்மா பேரவை தலைவர் ராமசாமி உளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இருகூர் 18வது வார்டு பொறுப்பாளர் கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் ஏ.சி.மகாலிங்கம் தலைமையில் கருமத்தம்பட்டி பேரூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் அட்ஷயா செந்தில், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், கவுன்சிலர்கள்  ராஜேந்திரன், எஸ்.கே.மணி, வசந்தி ஆறுமுகம், மார்டின்,பொருளாளர் ஜோசப்,செல்லமுத்து, ராயர்பாளையம் சுரேஷ் உள்ளிட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் வீதி, வீதியாக சென்று 3 ஆண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 
இருகூர் பேரூராட்சி மன்ற 5வது வார்டு பொறுப்பாளர் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் வி.கே.சண்முகம் தலைமையில் சூலூர் அங்கமுத்து, இருகூர் நகர செயலாளர் துரைசாமி, ஜல்லிப்பட்டி ராமசாமி, பாபு என்கிற ஜெயச்சந்திரன், கவுன்சிலர் பிரகாஷ், பள்ளபாளையம் பேரூராட்சி கழக செயலாளர் பேச்சிமுத்து உள்பட பலர் காமாட்சிபுரம் 5வது வார்டு, மெயின் ரோடு, குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வீடு,வீடாக சென்று ஜெயலலிதாவின் சாதனைகளை பெண்களிடம் விளக்கி கூறி  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். 
இருகூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து தேர்தல் பொறுப்பாளர் மாவட்ட ஊராட்சி தலைவர் கனகராஜ் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட இலக்கிய அணி செயலாளரும்,சுல்தான்பேட்டை ஒன்றிய துணைத் தலைவருமான வ.மா.பழனிசாமி தலைமையில், 8 மற்றும் 9 வது வார்டுகளில் உள்ள இருகூர் டவுன், கண்ணன் நகர் முத்துராமலிங்கம் வீதி, சாமியான்மேடை, ஒண்டிபுதூர் ரோடு, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் உமா மகேஸ்வரி, சுல்தான்பேட்டை ஒன்றிய பாசறை செயயலாளர் மகேஸ்வரன், பூராண்டம்பாளையம் ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம், சுல்தான்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், அமலோற்பவமேரி, கண்ணம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ரங்கநாதன், செஞ்சேரி தங்கவேல், வேலாயுதம், சின்னகுயிலி துரைசாமி, கிளை செயலாளர் சுந்தர்ராஜ்,சுல்தான்பேட்டை ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள் மணிமாலா, அமிர்தம், இருகூர் பகுதி கிளை நிர்வாகிகள் பூபால் செல்வம், ஜெகநாதன், வெற்றிவேல்,நாகராஜ், குமார், பிளம்பர் ஈஸ்வரன், உச்சா செல்வராஜ் ஆகியோர் வீடு,வீடாக சென்று  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.




0 comments: