Monday, September 01, 2014
திருப்பூரில் அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு, பி.என்., ரோடு, ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில், "டிவைடர்' இல்லாத பகுதிகளில், ரோட்டை இரண்டாக பிரிக்கும் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதில், ஒரு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும்; மறுபுறம், வாகனங்கள் எதிரில் வரவேண்டும். பிரதான ரோடுகளில், சில இடங்களில் வெள்ளைக்கோடு தேய்ந்து, அழிந்துள்ளது; சில இடங்களில், ரோட்டுக்கு நடுவே வெள்ளைக்கோடு வரைந்த அறிகுறியே காணப்படவில்லை. ரோட்டை பிரிக்காத இப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள், முறையான போக்குவரத்தை பின்பற்றுவதில்லை. முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்லும் நோக்கத்துடன், ரோட்டின் மறுபுறம் வரை வேகமாக செல்கின்றன. வரிசையாக செல்லும் கனரக வாகனங்களுக்கு இடையே கார்களும், டூவீலர்களும் புகுந்து செல்வது, வழக்கமாக உள்ளது.
மழைக்காலங்களில், வெள்ளைக்கோடு இல்லாத பகுதிகளில், ரோட்டின் அகலத்தை வாகன ஓட்டிகள் கணிக்க முடிவதில்லை. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக குறுக்கில் செல்வதால், விபத்து எளிதில் நடக்கிறது. ஊராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை என அந்தந்த துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ரோடுகளில், வெள்ளைக்கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ரோட்டுக்கு நடுவே ஒருமுறை வெள்ளைக்கோடு வரைந்தால், மூன்று ஆண்டுகள் வரை அழியாது. சில இடங்களில், ரோடு மற்றும் பாலம் பணிக்காக செப்பனிடும்போது கோடுகள் அழிந்திருக்கலாம். இதற்காக, டெண்டர் விடப்பட்டு, வெள்ளைக் கோடு வரையும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றார்.
மழைக்காலங்களில், வெள்ளைக்கோடு இல்லாத பகுதிகளில், ரோட்டின் அகலத்தை வாகன ஓட்டிகள் கணிக்க முடிவதில்லை. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக குறுக்கில் செல்வதால், விபத்து எளிதில் நடக்கிறது. ஊராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை என அந்தந்த துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ரோடுகளில், வெள்ளைக்கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ரோட்டுக்கு நடுவே ஒருமுறை வெள்ளைக்கோடு வரைந்தால், மூன்று ஆண்டுகள் வரை அழியாது. சில இடங்களில், ரோடு மற்றும் பாலம் பணிக்காக செப்பனிடும்போது கோடுகள் அழிந்திருக்கலாம். இதற்காக, டெண்டர் விடப்பட்டு, வெள்ளைக் கோடு வரையும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...

0 comments:
Post a Comment