Monday, September 01, 2014
திருப்பூரில் அவிநாசி ரோடு, மங்கலம் ரோடு, பி.என்., ரோடு, ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில், "டிவைடர்' இல்லாத பகுதிகளில், ரோட்டை இரண்டாக பிரிக்கும் வெள்ளைக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதில், ஒரு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும்; மறுபுறம், வாகனங்கள் எதிரில் வரவேண்டும். பிரதான ரோடுகளில், சில இடங்களில் வெள்ளைக்கோடு தேய்ந்து, அழிந்துள்ளது; சில இடங்களில், ரோட்டுக்கு நடுவே வெள்ளைக்கோடு வரைந்த அறிகுறியே காணப்படவில்லை. ரோட்டை பிரிக்காத இப்பகுதிகளில் செல்லும் வாகனங்கள், முறையான போக்குவரத்தை பின்பற்றுவதில்லை. முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்லும் நோக்கத்துடன், ரோட்டின் மறுபுறம் வரை வேகமாக செல்கின்றன. வரிசையாக செல்லும் கனரக வாகனங்களுக்கு இடையே கார்களும், டூவீலர்களும் புகுந்து செல்வது, வழக்கமாக உள்ளது.
மழைக்காலங்களில், வெள்ளைக்கோடு இல்லாத பகுதிகளில், ரோட்டின் அகலத்தை வாகன ஓட்டிகள் கணிக்க முடிவதில்லை. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக குறுக்கில் செல்வதால், விபத்து எளிதில் நடக்கிறது. ஊராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை என அந்தந்த துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ரோடுகளில், வெள்ளைக்கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ரோட்டுக்கு நடுவே ஒருமுறை வெள்ளைக்கோடு வரைந்தால், மூன்று ஆண்டுகள் வரை அழியாது. சில இடங்களில், ரோடு மற்றும் பாலம் பணிக்காக செப்பனிடும்போது கோடுகள் அழிந்திருக்கலாம். இதற்காக, டெண்டர் விடப்பட்டு, வெள்ளைக் கோடு வரையும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றார்.
மழைக்காலங்களில், வெள்ளைக்கோடு இல்லாத பகுதிகளில், ரோட்டின் அகலத்தை வாகன ஓட்டிகள் கணிக்க முடிவதில்லை. இதனால், எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறாக குறுக்கில் செல்வதால், விபத்து எளிதில் நடக்கிறது. ஊராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலை என அந்தந்த துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ரோடுகளில், வெள்ளைக்கோடு வரைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"ரோட்டுக்கு நடுவே ஒருமுறை வெள்ளைக்கோடு வரைந்தால், மூன்று ஆண்டுகள் வரை அழியாது. சில இடங்களில், ரோடு மற்றும் பாலம் பணிக்காக செப்பனிடும்போது கோடுகள் அழிந்திருக்கலாம். இதற்காக, டெண்டர் விடப்பட்டு, வெள்ளைக் கோடு வரையும் பணி மேற்கொள்ளப்படும்,' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...

0 comments:
Post a Comment