Monday, September 01, 2014
தெற்கு ரெயில்வே கால அட்டவணை கடந்த 28–ந் தேதி வெளியிடப்பட்டது. புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பிரீமியம் ரெயில்கள், பாசஞ்சர் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில ரெயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. 31 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டதால் பயண நேரம் குறைகிறது. புதிய கால அட்டவணை இன்று (1–ந் தேதி) முதல் நடைமுறைக்கு வந்தது.
கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12676) நேரம் மாற்றப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இந்த ரெயில் இரவு 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
இன்று முதல் கோவை எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.55 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.
சென்ட்ரலில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 8.15 மணிக்கு புறப்படும். 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 9 மணிக்கு புறப்பட்டு செல்லும். 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
இதே போல சென்ட்ரலில் இருந்து பழனிக்கு இரவு 9 மணிக்கு புறப்படக்கூடிய எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 9.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதன் புறப்பாடு நேரம் 30 நிமிடங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று முதல் மாலை 6 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து (12651) செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவரை இரவு 8.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டது. இன்று முதல் 5 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்படும்.
திருச்செந்தூரில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று முதல் மாலை 6.50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 11.25 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...

0 comments:
Post a Comment