Monday, September 01, 2014
தெற்கு ரெயில்வே கால அட்டவணை கடந்த 28–ந் தேதி வெளியிடப்பட்டது. புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பிரீமியம் ரெயில்கள், பாசஞ்சர் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில ரெயில்கள் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. 31 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டதால் பயண நேரம் குறைகிறது. புதிய கால அட்டவணை இன்று (1–ந் தேதி) முதல் நடைமுறைக்கு வந்தது.
கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12676) நேரம் மாற்றப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இந்த ரெயில் இரவு 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
இன்று முதல் கோவை எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.55 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 10.25 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.
சென்ட்ரலில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 8.15 மணிக்கு புறப்படும். 10 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 9 மணிக்கு புறப்பட்டு செல்லும். 30 நிமிடங்கள் முன்னதாக புறப்படும்.
இதே போல சென்ட்ரலில் இருந்து பழனிக்கு இரவு 9 மணிக்கு புறப்படக்கூடிய எக்ஸ்பிரஸ் இன்று இரவு முதல் 9.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதன் புறப்பாடு நேரம் 30 நிமிடங்கள் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இன்று முதல் மாலை 6 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து (12651) செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இதுவரை இரவு 8.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டது. இன்று முதல் 5 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.55 மணிக்கு புறப்படும்.
திருச்செந்தூரில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் இன்று முதல் மாலை 6.50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 11.25 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தமிழக முதல்வர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இதற்காக மக்கள், கடந்த மக்களவைத்...
-
தாராபுரம், : தாராபுரம் பகுதியில் தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்வதற்கு தடை விதிப்பதால், பால் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்து வர...
-
ஊழல்வாதிகளை தண்டிக்க தமிழகத்தில் ‘லோக் அயுக்தா’ அமைப்பை ஏற்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் எ...
-
பொங்கலூர் அருகே உள்ள துத்தாரிபாளையத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி கருணையம்மாள்(வயது 55). சம்பவத்தன்று காலையில் இவர் தோட்டத்துக்கு ச...
-
சூலூர் அடுத்துள்ள இருகூர் பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரியை ஆதரித்து மாவட்ட ஊராட்சி தலைவர...
-
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. திருச்...
-
சேலம் சாரதா கல்லூரி சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்றுநீர்போல கசிந்து அருகில் உள்ள கட்டிடத்திற்குள்ளும் புகுந்தது. குழாய் ...
-
புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.பெட்ரோல் மற்...
-
சென்னையில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த மழை சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமா...

0 comments:
Post a Comment