Friday, September 05, 2014

மதுரை டி.பி.ரோடு அரசரடி ரெயில்வே கிரவுண்டு எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் 37 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு இன்று காலை தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது உடலில் பல்வேறு இடங்களில் குத்து காயங்களுடன் வாலிபர் பிணம் கிடந்தது தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த ராமுத்தேவரின் மகன் முருகன் (வயது37) என தெரியவந்தது.
கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த இவருக்கு 2 மகள் உள்ளனர். முருகனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து தனித்தனியாக வசித்து வந்தனர்.
தனியாக வசித்து வந்த முருகன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் முருகனை ஒரு ‘மர்ம’ கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி வேறு எங்கேயோ வைத்து கொலை செய்துவிட்டு பிணத்தை பஸ் நிறுத்தத்தில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது.
இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. பெண்ணுடன் கள்ளத் தொடர்பு விவகாரமா? அல்லது தொழில் போட்டியா? முன்விரோதம் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 3–க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
0 comments:
Post a Comment