Friday, September 05, 2014

மதுரை டி.பி.ரோடு அரசரடி ரெயில்வே கிரவுண்டு எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் 37 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் கிடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசுக்கு இன்று காலை தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது உடலில் பல்வேறு இடங்களில் குத்து காயங்களுடன் வாலிபர் பிணம் கிடந்தது தெரிய வந்தது. பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்த ராமுத்தேவரின் மகன் முருகன் (வயது37) என தெரியவந்தது.
கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த இவருக்கு 2 மகள் உள்ளனர். முருகனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து தனித்தனியாக வசித்து வந்தனர்.
தனியாக வசித்து வந்த முருகன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் முருகனை ஒரு ‘மர்ம’ கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி வேறு எங்கேயோ வைத்து கொலை செய்துவிட்டு பிணத்தை பஸ் நிறுத்தத்தில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது.
இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. பெண்ணுடன் கள்ளத் தொடர்பு விவகாரமா? அல்லது தொழில் போட்டியா? முன்விரோதம் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 3–க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் ...
0 comments:
Post a Comment