Monday, September 29, 2014
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள நிப்ட் டீ பேஷன் பின்னலாடை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதன்மை ஆலோசகரும், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவருமான ராஜா சண்முகம் தலைமை தாங்கினார்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி 130 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டமும், 35 மாணவ, மாணவிகளுக்கு முதுகலைப்பட்டமும் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–
உலகில் ஆடை உற்பத்தி தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கடுமையான உழைப்பாளிகளாக விளங்குவதால் பின்னலாடை தொழில் துறையில் திருப்பூர் நகரம் தனித்தன்மை பெற்று விளங்குகிறது.
ஆடை வடிவமைப்பு துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு மாணவ, மாணவிகள் இதில் அதிகளவில் பட்டங்களை பெற்று வருகின்றனர்.
நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய பாணி ஆடைகளை வடிவமைப்பில் ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. ஆனால் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மீறாத வகையில் ஆடைகளை வடிவமைப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆடைகள் தயாரிக்கப்படவேண்டும். ஆடைகளே கலாசாரத்தின் எதிரொலி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆடை தயாரிப்பாளர்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும் அதிக பொறுப்புணர்வும், சமூக உணர்வும் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment