Saturday, September 13, 2014
திருவட்டாரில் வாலிபர், ஆட்டை கடித்து குதறிய வெறிநாய் பஸ் மோதி செத்தது.
இதுகுறித்த விவரம் வருமாறு:–
வெறிநாய்
திருவட்டார் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவட்டார் பாலம் அருகே ஓட்டல் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் தெருநாய்களின் கூட்டம் அதிகமாக காணப் படுகிறது. இந்த நாய்கள் அவ்வப்போது, சாலையில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன.
இந்தநிலையில், நேற்று காலை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றி, சுற்றி வந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற, செம்பறாவிளை பகுதியை சேர்ந்த 33 வயது வாலிபரை வெறிநாய் கடித்தது. பின்னர், அந்த நாய் திருவட்டார் பஸ் நிலையம் வந்தது. பஸ் நிலையத்தில் காலை நேரம் என்பதால், மாணவ– மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பஸ்சுக்காக காத்து நின்றனர்.
ஆட்டை கடித்தது
வெறிநாயை கண்டதும், பொதுமக்கள் அதை துரத்தினர். தொடர்ந்து, பஸ் நிலையத்தின் வெளியே வந்த நாய், அந்த பகுதியில் சாலையோரம் கட்டி வைத்திருந்த ஒரு ஆட்டை கடித்து குதறியது. பின்னர், அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற மாணவிகளை துரத்த தொடங்கியது.
இதற்கிடையே அந்த வழியாக வந்த பஸ் வெறிநாய் மீது மோதியது. இதில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே செத்தது. வெறிநாய் என்பதால், அதை யாரும் அப்புறப்படுத்த முன்வரவில்லை. காலை வேளையில் இந்த வெறிநாயின் அட்டகாசம் திருவட்டார் பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த விவரம் வருமாறு:–
வெறிநாய்
திருவட்டார் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவட்டார் பாலம் அருகே ஓட்டல் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் தெருநாய்களின் கூட்டம் அதிகமாக காணப் படுகிறது. இந்த நாய்கள் அவ்வப்போது, சாலையில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன.
இந்தநிலையில், நேற்று காலை திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பகுதியில் வெறிநாய் ஒன்று சுற்றி, சுற்றி வந்தது. அப்போது, அந்த வழியாக சென்ற, செம்பறாவிளை பகுதியை சேர்ந்த 33 வயது வாலிபரை வெறிநாய் கடித்தது. பின்னர், அந்த நாய் திருவட்டார் பஸ் நிலையம் வந்தது. பஸ் நிலையத்தில் காலை நேரம் என்பதால், மாணவ– மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பஸ்சுக்காக காத்து நின்றனர்.
ஆட்டை கடித்தது
வெறிநாயை கண்டதும், பொதுமக்கள் அதை துரத்தினர். தொடர்ந்து, பஸ் நிலையத்தின் வெளியே வந்த நாய், அந்த பகுதியில் சாலையோரம் கட்டி வைத்திருந்த ஒரு ஆட்டை கடித்து குதறியது. பின்னர், அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற மாணவிகளை துரத்த தொடங்கியது.
இதற்கிடையே அந்த வழியாக வந்த பஸ் வெறிநாய் மீது மோதியது. இதில் அந்த நாய் சம்பவ இடத்திலேயே செத்தது. வெறிநாய் என்பதால், அதை யாரும் அப்புறப்படுத்த முன்வரவில்லை. காலை வேளையில் இந்த வெறிநாயின் அட்டகாசம் திருவட்டார் பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment